உ.பியில் தொடரும் அவலம்! மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மதிய உணவில் எலி! 

 

உ.பியில் தொடரும் அவலம்! மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மதிய உணவில் எலி! 

உத்திரபிரதேச மாநிலத்தில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் எலி உயிரிழந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரபிரதேச மாநிலத்தில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் எலி உயிரிழந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஒரு லிட்டர் பாலை தண்ணீரில் கலந்து 81 மாணவர்களுக்கு வழங்கிய விவகாரம் அண்மையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் மேற்கு உத்தரபிரதேசத்தின் முசாபர்நகர் மாவட்டம் ஹப்பூரில்  உள்ள அரசு பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மதிய உணவில் எலி ஒன்று இருந்துள்ளது. இந்த உணவை ஒன்பது குழந்தைகளும் ஒரு ஆசிரியரும் உட்கொண்டுள்ளனர். உணவை சாப்பிட்டவர்கள், சாப்பிட்ட சில மணி நேரத்திலேயே வாந்தி, மயக்கத்துக்கு ஆளானதால் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

Meals

இந்த விவகாரம் குறித்து மாநில அரசும், பள்ளிக்கல்வித்துறையும் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.