உஷாரய்யா உஷாரு… குறியீடுகள் வரைந்து கொள்ளையடிக்கும் வட மாநிலத்தவர்கள்? உண்மை நிலவரம் என்ன?

 

உஷாரய்யா உஷாரு… குறியீடுகள் வரைந்து கொள்ளையடிக்கும் வட மாநிலத்தவர்கள்? உண்மை நிலவரம் என்ன?

வட மாநிலத்தவர்கள்  ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிகளில்  நோட்டமிட்டு குறியீடுகளை வரைந்து வைத்துக் கொண்டு கொள்சமபவத்தில் ளை  சம்பவத்தில் ஈடுபட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

உஷாரய்யா உஷாரு… குறியீடுகள் வரைந்து கொள்ளையடிக்கும் வட மாநிலத்தவர்கள்? உண்மை நிலவரம் என்ன?

மதுரை: வட மாநிலத்தவர்கள் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிகளில்  நோட்டமிட்டு குறியீடுகளை வரைந்து வைத்துக் கொண்டு கொள்ளை  சம்பவத்தில் ஈடுபட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் வட மாநிலத்தவர்களின் வருகையும் ஆதிக்கமும் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகிறது. வட மாநிலத்தவர்கள் பலர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக பரவலான குற்றச்சாட்டு ஒன்று உள்ளது.  அந்த வகையில் சமீப காலமாக வீடுகளில் குறியீடுகள் வரைந்து வைத்துக் கொண்டு அதை அடையாளமாகப்  பயன்படுத்தி வட மாநில கொள்ளையர்கள் கொள்ளையடித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

குறிப்பாக மதுரை நகரில் உள்ள வீடுகளில் குறியீடுகள் வரைந்து கொள்ளை சம்பவங்களில் வடமாநில கும்பல் ஈடுபடுவதாகப் புகார்கள் கிளம்பியுள்ளன.  இதனால் போலீசார் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர் என்றும் செய்தித்தாள் ஒன்றில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. 

மேலும் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வரும் இதுபோன்ற கொள்ளை சம்பவத்தைத்  தடுக்க  24 மணி நேரமும் போலீசார்  ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் வீடுகளில் இதுபோன்று குறியீடுகள் இருந்தால் உடனே போலீசுக்குத் தகவல் கொடுக்குமாறு அறிவித்துள்ளதாகவும் தெரிகிறது.