உழைக்கும் வர்க்கத்தினரை மீண்டெழச் செய்ய உறுதி ஏற்போம்! – டிடிவி தினகரன் மே தின வாழ்த்து

 

உழைக்கும் வர்க்கத்தினரை மீண்டெழச் செய்ய உறுதி ஏற்போம்! – டிடிவி தினகரன் மே தின வாழ்த்து

அரசு,தனியார் என்ற பேதமெல்லாம் இல்லாமல் அனைத்துத் துறைகளிலும் பாதிக்கப்படும் உழைக்கும் வர்க்கத்தினரை உற்சாகத்தோடு மீண்டெழச் செய்ய இந்த மே தினத்தில் உறுதி ஏற்போம் என டிடிவி தினகரன் மே தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அரசு,தனியார் என்ற பேதமெல்லாம் இல்லாமல் அனைத்துத் துறைகளிலும் பாதிக்கப்படும் உழைக்கும் வர்க்கத்தினரை உற்சாகத்தோடு மீண்டெழச் செய்ய இந்த மே தினத்தில் உறுதி ஏற்போம் என டிடிவி தினகரன் மே தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று (ஏப்.30) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

may-day

“அனைத்துத் துறைகளிலும் பாதிக்கப்படும் உழைக்கும் வர்க்கத்தினரை உற்சாகத்தோடு மீண்டெழச் செய்ய
உழைப்புதான் இந்த உலகை வாழ்விக்கிற சக்தி என்பதை நிரூபிக்கும் உழைப்பாளிகள் அனைவருக்கும் உழைப்பாளர் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். 
உரிமைகளுக்காகப் போராடி வென்ற உழைப்பாளிகளின் உயர்வைப் போற்றும் மே தினத்தில், ஒவ்வொன்றையும் நமக்கு உருவாக்கித் தந்திருக்கும் உழைப்பாளர்களை நன்றியோடு நினைவு கூர்வோம்.

உலகம் இதுவரை சந்தித்திராத சூழ்நிலையில் கூட எத்தனையோ பேரின் உழைப்புதான் மனித குலத்தைக் காப்பாற்றி வருகிறது. எல்லாமே முடங்கிக்கிடக்கிற நேரத்திலும் நம்முடைய உணவுக்காக, சுகாதாரத்திற்காக, உயிருக்காக, மீட்சிக்காக யாரா ஒருவர் எங்கோ ஓரிடத்தில் உடலை வருத்தி, மூளையைப் பயன்படுத்தி உழைத்துக்கொண்டுதான் இருக்கிறார். இவர்கள் அத்தனை பேரையும் போற்றிட வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.
இந்த இக்கட்டான காலத்தில் வேலையிழப்பு, ஊதிய இழப்பு போன்றவற்றைச் சந்திக்கும் எல்லாத் துறைகளின் உழைப்பாளர்களுக்கும் நாம் துணை நிற்போம். அரசு, தனியார் என்ற போதமெல்லாம் இல்லாமல் அனைத்துத் துறைகளிலும் பாதிக்கப்படும் உழைக்கும் வர்க்கத்தினரை உற்சாகத்தோடு மீட்டெழச் செய்ய இந்த மே தினத்தில் உறுதி ஏற்போம்” என்று கூறியுள்ளார்.