உள்ளாட்சி தேர்தல்: 27,28 ஆம் தேதிக்கு பொது விடுமுறை!

 

உள்ளாட்சி தேர்தல்: 27,28 ஆம் தேதிக்கு பொது விடுமுறை!

ஊரக உள்ளாட்சி அமைப்பு தேர்தல் நடைபெறும் பகுதிகளில் தேர்தல் நாளன்றும பொது விடுமுறை விட வேண்டும்  என தமிழக அரசுக்கு மாநில தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.

ஊரக உள்ளாட்சி அமைப்பு தேர்தல் நடைபெறும் பகுதிகளில் தேர்தல் நாளன்றும பொது விடுமுறை விட வேண்டும்  என தமிழக அரசுக்கு மாநில தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் வரும் 27 மற்றும் 30 ஆம் தேதி இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுத் தாக்கல்  முடிவடைந்து பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. அதன்படி சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிபேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளகுறிச்சி, நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்கள் தவிர்த்து எஞ்சியுள்ள 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. 

தேர்தல் ஆணையம்

இந்நிலையில் தமிழக தேர்தல் ஆணைய செயலாளர் சுப்ரமணியன், தமிழக அரசுக்கு எழுதிய கடிதத்தில், ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெரும் பகுதிகளில் வரும் 27, 30ம் தேதியன்று பொதுவிடுமுறை விட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.