உள்ளாட்சி தேர்தல் காரணமாக டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் ஒத்திவைப்பு: முழுவிவரம் உள்ளே!
குரூப் 1 பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத்தேர்வுகள் நடைபெறுவதாக இருந்தது.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதன் காரணமாக டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
வரும் 22 முதல் 30 ந் தேதி வரை அரசுப்பணியாளர் தேர்வாணைய தேர்வுகள் நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்திருந்தது. அந்நாட்களில் குரூப் 1 பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத்தேர்வுகள் நடைபெறுவதாக இருந்தது.
இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தல் காரணமாக 22 முதல் 30 ந் தேதிக்கு மாற்றாக வரும் ஜனவரி 5ஆம் தேதி முதல் 12ந் தேதிவரை தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான தேர்வு நுழைவு சீட்டினை விண்ணப்பதாரர்கள் 27.12.2019 முதல் 12.01.2020 வரை www.tnpsc.gov.in ல் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.