உளுந்தூர்பேட்டை, விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிப்பது நிறுத்தம்!

 

உளுந்தூர்பேட்டை, விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிப்பது நிறுத்தம்!

தொற்று நோயான கொரோனா வைரஸ் நம் நாட்டிலும் அதன் வேலையை காட்ட தொடங்கியுள்ளது. நாளுக்கு நாள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே செல்கிறது. இன்று காலை நிலவரப்படி, நம் நாட்டில் கொரோனா வைரசுக்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 10ஆக உயர்ந்தது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 500 ஐ தாண்டியுள்ளது. இதனால் அனைத்து மாநிலங்களும் முடக்கப்பட்டு தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

Toll

சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கும் இடங்களில் அரை மணி நேரம் நின்று செல்வதால் நோய்த்தொற்று ஏற்படலாம் என்பதை கவனத்தில் கொண்டு இன்று ஒருநாள் சுங்க கட்டண விலக்கு அளிப்பதற்கு அரசு பரிசீலிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கோரிக்கை வைத்திருந்தது. அதன்படி உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை தொடர்ந்து விக்கிரவாண்டி சுங்கச்சாவடியிலும் கட்டணம் வசூலிப்பது நிறுத்தப்பட்டுள்ளது.மற்ற சுங்கச்சாவடிகளிலும் இன்னும் சற்று நேரத்தில் கட்டணம் வசூலிப்பது நிறுத்தபடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.