உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் குமரகுரு உடல்நிலை கவலைக்கிடம்!

 

உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் குமரகுரு உடல்நிலை கவலைக்கிடம்!

எடப்பாடிக்கு மிகவும் நெருக்கமான நண்பரான குமரகுரு,  கடந்த சில நாட்களுக்கு முன்னர் உடல்நலக் குறைவின் காரணமாகச் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றி வருபவர் குமரகுரு. இவர் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டையில் திருப்பதி வெங்கடாஜலபதி திருக்கோவில் கட்டுவதற்காக, தேவஸ்தானம் போர்டுக்கு 5½ ஏக்கர் நிலத்தை நன்கொடையாகக் கொடுத்தார். இதற்கான பத்திரப்பதிவு நடந்து முடிந்து விட்டதாகவும், அங்கு மிகப்பெரிய ஏழுமலையான் கோவில் கட்டப்பட உள்ளதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார். 

ttn

எடப்பாடிக்கு மிகவும் நெருக்கமான நண்பரான குமரகுரு,  கடந்த சில நாட்களுக்கு முன்னர் உடல்நலக் குறைவின் காரணமாகச் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரின் உடல் நிலை சீராக இல்லை என்றும் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகின்றன.