உளுந்தஞ்சோறும் , கருவாட்டுக் குழம்பும்! நெல்லை ராஜ் மெஸ்!

 

உளுந்தஞ்சோறும் , கருவாட்டுக் குழம்பும்! நெல்லை ராஜ் மெஸ்!

திருநெல்வேலி பைபாசில் வண்ணாரப்பேட்டை, கோமதிநகரில் இருக்கிறது ராஜு ஆட்டுக்கறி சாப்பாடு மெஸ்! இந்த உணவகம் பற்றி யாரிடம் கேட்டாலும் வழிசொல்லிவிட்டு,அங்க உளுந்தஞ்சோறும், கருவாட்டுக் குழம்பும் சிறப்பாக இருக்கும் விட்டுறாதீங்க என்று நினைவூட்டும் அளவுக்கு அந்தக் காம்போ பிரபலம் ஆகி இருக்கிறது.

திருநெல்வேலி பைபாசில் வண்ணாரப்பேட்டை, கோமதிநகரில் இருக்கிறது ராஜு ஆட்டுக்கறி சாப்பாடு மெஸ்! இந்த உணவகம் பற்றி யாரிடம் கேட்டாலும் வழிசொல்லிவிட்டு,அங்க உளுந்தஞ்சோறும், கருவாட்டுக் குழம்பும் சிறப்பாக இருக்கும் விட்டுறாதீங்க என்று நினைவூட்டும் அளவுக்கு அந்தக் காம்போ பிரபலம் ஆகி இருக்கிறது.

nellai-raj-mess

அதன் எதிரிலே ராஜு வெஜிடேரியன் மெஸ்ஸும் இருக்கிறது. இந்த ஆட்டுக்கறி மெஸ்ஸை விட சைவ மெஸ் சீனியர். வித்தியாசம் காட்டத்தான் பெயரிலேயே ஆட்டுக்கறி இடம் பெற்று இருக்கிறது. மட்டனில் பாயாவைத் தவிர அத்தனை ஸ்பேர் பார்ட் ஐட்டங்களும் சிறப்பாக இருக்கின்றன. கோழியில் ஃபிரைகளை விட இங்கே கிடைக்கும் கோழிக்குழம்பு காரம். மணம்,குணம் நிறைந்ததாக இருக்கிறது. 

இவர்களிடம், கருவாட்டுக் குழம்போ, சிக்கன் குழம்போ எது ஆர்டர் செய்தாலும் உள்ளே சில துண்டுகளோடுதான் தருகிறார்கள். மீன் ஃபிரை இன்னொரு முக்கியமான ஐட்டம், அளவான காரம்தான். ஆனால் மீனில் நன்றாக காரம் இறங்கி இருக்கிறது. நல்ல மொறுமொறுப்பாக வருத்துத் தருகிறார்கள். இப்போது இவர்களிம் சிக்னேச்சர் டிஷ்ஷான உளிந்தஞ் சோறு.இப்போது கிட்டத்தட்ட வீடுகளில் இதை செய்வதையே விட்டுவிட்ட நிலையில் இந்த உணவகத்தில் இது கிடைப்பது அதிசயம்தான்.

 

தோல் நீக்காத முழு உளுந்துடன் பூண்டு சீரகம் சேர்த்துச் செய்யப்படும் சோறு இது.பிரசவித்த பெண்கள் உடல் தேறுவதற்காக செய்து தரப்படும் ஒரு ஸ்பெஷல் ஐட்டம் இது.இதற்கு நல்ல காரசாரமான தொடுகறிதான் மேட்சாகும்.அதற்கு இவர்கள் தேர்ந்து எடுத்து இருப்பது கருவாட்டுக் குழம்பு.காய்களும் கருவாடும் சேர்த்து செய்த அந்தக் குழம்பு உளுந்தங்களிக்கு செம காம்போ.அடுத்த முறை நெல்லையை நெருங்கும்போது வண்ணாரப்பேட்டை வந்ததும்,ராஜு மெஸ் உங்களுக்கு நினவு வரட்டும்.