உளறிக்கொட்டிய ஓ.பி.எஸ் மகன்! வாய்க்கு வந்ததெல்லாம் வரலாறா!?

 

உளறிக்கொட்டிய ஓ.பி.எஸ் மகன்! வாய்க்கு வந்ததெல்லாம் வரலாறா!?

அ.தி.மு.க அமைச்சர்கள் மைக்கைப் பிடித்ததும் பண்ணுகிற காமெடிக்கு அளவே இல்லாமப் போச்சு! ஒரு வருடமாக இவர்கள்பண்ணின கூத்துக்களை ஒரே நாளில் பின்னுக்கு தள்ளி அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் துணை முதல்வர் ஒ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத் குமார்

தமிழக முதல்வராக இருந்து கம்பீரமாக கட்சியை வழி நடத்திய ஜெயலலிதா மறைவுக்கு பின், அ.தி.மு.க அமைச்சர்கள் மைக்கைப் பிடித்ததும் பண்ணுகிற காமெடிக்கு அளவே இல்லாமப் போச்சு! ஒரு வருடமாக இவர்கள்பண்ணின கூத்துக்களை ஒரே நாளில் பின்னுக்கு தள்ளி அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் துணை முதல்வர் ஒ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத் குமார். அந்த வீடியோதான் நேற்றிலிருந்து வைரலாகிக்கிட்ருக்கு.

வேளான் மக்களை வியர்க்க வைத்த ஓபிஎஸ்

தமிழக மக்களுக்கு இன்னும் எவ்வளவு அதிர்ச்சி காத்திருக்கிறதோ தெரியவில்லை!

கடந்த வருடம் தான் தன்னுடைய 33 ஏக்கர்  விவசாய நிலத்தில் 80 லட்சம் சம்பாதித்ததாக சொல்லி தமிழக வேளான் மக்களை வியர்க்க வைத்தார். அ.தி.மு.க விவசாயிகளிலேயே அம்மா ஐதராபாத்  திராட்சைத் தோட்டத்தில் விவசாயம் செய்து சம்பாதித்தற்கு பிறகு பெருங்கொண்ட விவசாயியாக உருவெடுத்து இருப்பதாக தேனி அ.தி.மு.க-வினர் பெருமையாக பேசிகொண்டு இருக்கிறார்கள்.

ops son

அந்த 200 அடி ராட்சத கிணற்றை மட்டும் ஏமாந்த ஒபிஎஸ் மக்களுக்குத் தாரை வார்க்காமல் இருந்திருந்தால் இந்நேரம் தம்பி 8 கோடிக்கு விவசாயம் பாத்திருக்கும் என்று பேசிக்கொண்டு இருக்க, இப்போது அடுத்த வெடியை வீசி இருக்கிறார்! இது வரலாறே காணாத வரலாற்று வாணவேடிக்கை!

சேர,சோழ,பாண்டியர்கள் முக்குலத்தோர்

அதன்படி, சேர,சோழ,பாண்டியர்களான மூவேந்தர்களும் முக்குலத்தோர் பிரிவைச் சேர்ந்தவர்கள்தான் என்ற அறிய தகவலைச் சொல்லி தமிழ் கூறும் நல்லுலகை அதிர வைத்திருக்கிறார்.அதுவும் எப்படி? அகமுடையார்தான் சேரர்களாம். சேட்டன்மார் கவனிக்க, ஒ.பி.எஸ் உங்க ரிலேட்டிவ்தான் கேரள பார்டர்ல அவரோட தம்பி  ராணுவ ஹெலிகாப்டர் புகழ் ஒ.பி ராஜா காலேஜ் கட்றாராம்!,அனேகமாக உங்களுக்கெல்லாம் ஃபிரி அட்மிசனே கிடைக்கலாம்,எஞ்சாய்.

thanjavur temple

அடுத்து சோழர்கள் யாரென்று உங்களுக்கு சொல்கிறார் ‘ தஞ்சை பெரிய கோவிலைக் கட்டிய கள்ளர்கள்’தான் சோழர்களாம். இதுவரைக்கும் சுமாரான ஃபுலோவில் போகும் ரவீந்திரநாத் மதுரை என்று சொல்லும் போது ஃபுலோ மிஸ்ஸாகிறது!

பெரியார் பேரன் ஈவிகேஎஸ்

அது ஏன் தெரியுமா? தேனி மக்களவைத் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்.பெரியாரின் பேரனென்பதால் அவர் ஜாதி உலகத்துக்கே தெரியும்.தேனி மக்களவைத் தொகுதியில் கன்னடம் பேசும் கவுடர்களும், நாயக்கர்களும் கணிசமாக இருக்கிறார்கள்.

evks

அடுத்தது அ.ம.மு.க சார்பாக போட்டியிடும் வேட்பாளர் தங்கச்செல்வன். உள்ளூர் கள்ளர். இவர்கள் இருவரும் ஏற்கனவே தேர்தலில் நின்று வெற்றி பெற்றவர்கள். மக்களுக்கு அறிமுகமானவர்கள்.இவர்கள் இருவரையும் எதிர்த்து களம் காண்கிறார் அ.தி.மு.க-வின் ரவீந்திரநாத் குமார்.

மீனாட்சியம்மன் கோவிலைக் கட்டி ம..ம..மன்னன்

ஒ.பி.எஸ் விருதுநகர் பக்கம் இருந்து தேனியில் வந்து குடியேறிய மறவர். அகமுடையார், கள்ளர், மறவர் இந்த மூன்று சாதிகள்தான் தங்களை முக்குலத்தோர் என்று அழைத்துக்கொண்டு, ஒரே சாதி என்று சொன்னாலும் உ ள் குத்துக்களுக்கு பஞ்சமில்லை! அதனால்தான் மதுரை மீனாட்சியம்மன் கோவிலைக் கட்டி மதுரையை ஆண்ட ம..ம..மன்னன் என்கிறார். மறவன் என்று சொல்லத்தான் வந்திருக்கிறார், ரைமிங்க பார்த்தா நம்ம எய்ம் மிஸ்ஸாயிடும் என்று மன்னன் என்றி சொல்லிவிட்டார்.

meenakshi amman temple

முக்குலத்தில் அந்த மூன்றாவது குலம் எது என்றே சொல்லாமல் முடித்திருக்கிறார். ஆனால் போட்டி காங்கிரசுக்கும் அ.ம.மு.க-வுக்கும்தான்,அ.தி.மு.க போட்டியிலேயே இல்லை என்கிறார்கள் உள்ளூர் அவதானிகள்.ஆக தேர்தலுக்கு பின்  ஓய்வு கிடைத்தால்,ரவீந்திரநாத் குமார் இன்னும் நிறைய வரலாற்று ஆய்வுகளை செய்து தமிழருக்கு பெருமை சேர்ப்பார் என்று நம்பலாம்!

இதையும் வாசிங்க

புதிய தமிழகம் கட்சி இரட்டை இலை சின்னத்தில் போட்டி: கிருஷ்ணசாமி அறிவிப்பு!