உல்லாசம் ! சயனைடு ! கொலை ! கொள்ளை ! சீரியல் கில்லருக்கு தூக்கு !

 

உல்லாசம் ! சயனைடு ! கொலை ! கொள்ளை ! சீரியல் கில்லருக்கு தூக்கு !

கர்நாடக மாநிலத்தில் 20 பெண்களைக் கொன்ற சீரியல் கில்லர் சயனைடு மோகனுக்கு மரண தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் திருமண ஆசை காட்டி பெண்களிடம் உல்லாசம் அனுபவித்துவிட்டு கொலை செய்தையே வேலையாக வைத்திருந்தவர் மோகன். பெண்களை தன் காம வலையில் விழ வைப்பதும் பின்னர் அவர்களை கொலை செய்து பணத்தை சுருட்டுவதையும் முழுநேர தொழிலாக செய்து வந்தவன் மோகன்.

கர்நாடக மாநிலத்தில் 20 பெண்களைக் கொன்ற சீரியல் கில்லர் சயனைடு மோகனுக்கு மரண தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் திருமண ஆசை காட்டி பெண்களிடம் உல்லாசம் அனுபவித்துவிட்டு கொலை செய்தையே வேலையாக வைத்திருந்தவர் மோகன். பெண்களை தன் காம வலையில் விழ வைப்பதும் பின்னர் அவர்களை கொலை செய்து பணத்தை சுருட்டுவதையும் முழுநேர தொழிலாக செய்து வந்தவன் மோகன்.

cynaide mohan

2003-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை 20 பெண்களை ஏமாற்றி சயனைடு கொடுத்து கொன்றதால் சயனைடு மோகன் என்று அழைக்கப்படுகிறான். ஏற்கனவே 3 கொலை வழக்குகளில் மரண தண்டனை பெற்ற சயனைடு மோகனுக்கு தற்போது 4வது வழக்கிலும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2005ம் ஆண்டு பெங்களூரு கெம்பேகவுடா பகுதியில் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததற்காக தற்போது அவருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

முதலில் வேலை வாங்கி தருவதாக பெண்களை அழைப்பார். நிறைய நகைகள் அணிந்து வந்தால்தான் வேலை கிடைக்கும் என கூறுவார். பின்னர் அவர்களுடன் உல்லாசமாக இருந்துவிட்டு ஒரு மாத்திரை தருவார். அது கர்ப்பத் தடைக்கான மாத்திரை என கூறுவர். ஆனால் அது சயனைடு என தெரியாமல் சாப்பிடும் பெண்கள் இறந்துவிடுவர். பின்னர் அந்த பெண் அணிந்திருக்கும் நகைகளுடன் தப்பி விடுவார்.

mohan

பொய்யான அடையாளங்கள், கற்பழிப்பு, மற்றும் சயனைடுடன் போடப்பட்ட ‘கருத்தடை’ மாத்திரைகள் மூலம் பெண்களைக் கவர்ந்திழுக்கும் தொடர்ச்சியான வழக்குகளுக்குப் பிறகு, மோகன் இறுதியாக பன்ட்வால் கிராமப்புற போலீசாரால் 2009 இல் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் சயனைடு மோகன் குற்றவாளி என உறுதி செய்த நீதிமன்றம் கடத்தலுக்கு 10 ஆண்டுகள், பாலியல் பலாத்காரத்திற்கு ஏழு ஆண்டுகள், விஷம் கொடுத்த்தற்கு 10 ஆண்டுகள், கொள்ளைக்கு ஐந்து ஆண்டுகள், மோசடி செய்ததற்கு ஒரு வருடம், ஆதாரங்களை அழித்ததற்காக ஏழு ஆண்டுகள் உள்ளிட்ட பல்வேறு சிறைத்தண்டனைகளும் அவருக்கு விதிக்கப்பட்டுள்ளன. மரண தண்டனை உயர் நீதிமன்றத்தால் உறுதி செய்யப்படும் வரை அனைத்து தண்டனைகளும் ஒரே நேரத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.