உலக முதலீட்டாளர் மாநாடு மூலம் ஒரு இளைஞருக்காவது வேலை கிடைத்துள்ளதா? ஸ்டாலின் கேள்வி

 

உலக முதலீட்டாளர் மாநாடு மூலம் ஒரு இளைஞருக்காவது வேலை கிடைத்துள்ளதா? ஸ்டாலின் கேள்வி

நெல்லை மாவட்டம் நாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் நாங்குநேரியில் வாகன பிரச்சாரத்தில் ஈடுபட்டார். 

நெல்லை மாவட்டம் நாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் நாங்குநேரியில் வாகன பிரச்சாரத்தில் ஈடுபட்டார். 

அப்போது பேசிய அவர், “நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை தந்ததற்கு நன்றி. நன்றி உணர்வோடு உங்களை நாடி வந்திருக்கிறோம், இன்றைக்கு தமிழ்நாட்டிலே என்ன நிலைமை என்பது உங்களுக்கே நன்றாக தெரியும். இன்றைக்கு தமிழ்நாட்டில்  நடக்கின்ற ஆட்சி மத்தியில் இருக்கக்கூடிய மோடியின் ஆட்சி. தமிழகத்தில் விலைவாசி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. 

Stalin

எடப்பாடியின் கவனம் தனது ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்வதிலேயே உள்ளது. மக்கள் மீது எந்த அக்கறையும் கொள்ளவில்லை. தமிழக முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் வெளிநாட்டுக்கு சென்று வந்தனர். எதற்காக  செல்கிறீர்கள் என்று கேட்டதற்கு தமிழகத்திற்கு வெளிநாட்டு முதலீட்டை கொண்டு வர செல்கிறோம் என்று கூறினர். 2015ம் ஆண்டு ஜெயலலிதா உலக முதலீடு மாணவர்கள் ஒன்றை நடத்தினார் அதில் அதிக முதலீடு வந்ததாக ஜெயலலிதா கூறினார் அதன் மூலமாக பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என கூறினார். இதுவரை யாருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது இவர்கள் இரண்டாவது உலக முதலீட்டு மாநாட்டை நடத்துவதாக கூறுகின்றனர். இரண்டு உலக முதலீட்டு மாநாட்டையும் சேர்த்து 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்குவதாக முதல்வர் பழனிசாமி கூறினார். அப்படி வேலையில் சேர்ந்த ஒரு இளைஞரை காட்டுங்கள்.. உங்களை நான் பாராட்டுகிறேன்” என பேசினார்.