உலக மக்களிடையே இந்து மதத்தின் மீதான ஈர்ப்பு அதிகரித்துள்ளது- பொன் ராதாகிருஷ்ணன்

 

உலக மக்களிடையே இந்து மதத்தின் மீதான ஈர்ப்பு அதிகரித்துள்ளது- பொன் ராதாகிருஷ்ணன்

உலக மக்களிடையே இந்து மதத்தின் மீதான ஈர்ப்பு அதிகரித்துள்ளது என பாஜகவின்  மூத்த தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

உலக மக்களிடையே இந்து மதத்தின் மீதான ஈர்ப்பு அதிகரித்துள்ளது என பாஜகவின்  மூத்த தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோயிலில் அத்தி வரதரை தரிசனம் செய்ய வந்த பொன் ராதாகிருஷ்ணன் தரிசனத்திற்கு பின்பு செய்தியாளர்களை சந்தித்தர். அப்போது பேசிய அவர், “அத்தி வரதரை காட்சிப்பொருளாக இல்லாமல் வணங்கத்தக்க புனிதமான இடம் என மனதில் வைத்துக்கொண்டு எந்த நாட்டைச் சேர்ந்த வந்தாலும் கூட அவர்கள் வரவேற்கப்பட வேண்டும். பல வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் இந்து மதத்தை தழுவி இந்துக்களாக தங்களை அடையாளப் படுத்திக் கொண்டிருக்கிறார்கள் 

இன்று உலகத்தில் மிக வேகமாக மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மதமாக இந்து மதம் பெருகி கொண்டிருக்கிறது. அதற்கு காரணம் உலக அளவில் இருக்கக்கூடிய மக்களிடையே இந்து மதத்தின் மீது ஈர்ப்பு அதிகரித்திருப்பதே காரணம் என நாம் உணர வேண்டும். கோயில் நிர்வாகம் கட்டாயமாக யாரையும் புறம் தள்ள கூடாது. பெருமாள் யாருக்கும் எதிரானவர் கிடையாது” என்று கூறினார்.