உலக நாயகன் மீது வழக்குப்பதிவு!!

 

உலக நாயகன் மீது வழக்குப்பதிவு!!

மதக்கலவரத்தை தூண்டும் விதத்தில் பேசியதாக கமல் மீது அறவக்குறிச்சி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

மதக்கலவரத்தை தூண்டும் விதத்தில் பேசியதாக கமல் மீது அறவக்குறிச்சி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

கரூர் அரவக்குறிச்சி தொகுதியில் பரப்புரை மேற்கொண்டபோது மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என பேசினார். இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனங்களை பதிவு செய்தனர். இந்து மதத்தை அவமதிப்பதாக குற்றஞ்சாட்டினர். எனவே மதக்கலவரத்தை தூண்டும் விதத்தில் பேசியதாக கமல் மீது அறவக்குறிச்சி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மத, இன, சாதி உணர்வை தூண்டும்விதமாக பேசுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தேர்தல் விதிகளை மீறுவோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கரூர் எஸ்.பி எச்சரிக்கை விடுத்துள்ளனர்.