உலக குத்துச்சண்டை போட்டி: 2 பதக்கங்களை பெற்ற இந்திய வீரர்கள்..!

 

உலக குத்துச்சண்டை போட்டி: 2 பதக்கங்களை பெற்ற இந்திய வீரர்கள்..!

உலக குத்துச்சண்டை போட்டியில் அமித் பங்கல் வெள்ளிப்பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார். மற்றொரு பிரிவில் இந்தியாவிற்கு வெண்கல பதக்கம் கிடைத்துள்ளது.

ரஷ்யாவில் நடந்த முடிந்த ஆண்களுக்கான உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா சார்பில் 52 எடைப்பிரிவில் கலந்து கொண்ட அமித் பங்கல் சிறப்பாக ஆடி இறுதிப் போட்டி வரை முன்னேறினார். 

இறுதிப்போட்டியில் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற உஸ்பெகிஸ்தான் வீரரான சாக்கோபிடின் சைரோவை எதிர்கொண்டார். துவக்கம் முதலே இருவருக்கும் இடையேயான ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்றது.

இதில் சாக்கோபிடின் அமித் பங்கலை வீழ்த்தி 5-0 என்ற கணக்கில் தங்கம் வென்றார். இறுதியாக இந்தியாவிற்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.

boxing

இதன்மூலம் உலக குத்துச்சண்டை போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற ஒரே இந்தியர் என்ற பெருமையை இவர் பெற்றார்.

63 கிலோ எடை பிரிவில் பங்கேற்ற இந்தியாவைச் சேர்ந்த மணிஷ் என்பவர் காலிறுதி போட்டியில் தோல்வியை தழுவினார். இருப்பினும் வெண்கலப் பதக்கத்தை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார். இதன்மூலம் உலக சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவிற்கு இரண்டு பதக்கங்கள் கிடைத்திருக்கின்றன.