உலகை இந்தியா வழிநடத்த வேண்டும் – பிரதமர் மோடி

 

உலகை இந்தியா வழிநடத்த வேண்டும் – பிரதமர் மோடி

வருகிற 17 ஆம் தேதியுடன் ஊரடங்கு நிறைவு பெறவுள்ள நிலையில் பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அப்போது, “ஒரு வைரஸ் ஒட்டுமொத்த உலகத்தையே சின்னாபின்னமாக்கியிருப்பது வேதனை.

வருகிற 17 ஆம் தேதியுடன் ஊரடங்கு நிறைவு பெறவுள்ள நிலையில் பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அப்போது, “ஒரு வைரஸ் ஒட்டுமொத்த உலகத்தையே சின்னாபின்னமாக்கியிருப்பது வேதனை. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ்க்கு 3 லட்சம் பேர் உயிரிழந்திருப்பது வேதனை அளிக்கிறது. கடந்த 4 மாதங்களாக கொரோனாவுக்கு எதிராக இந்தியா கடுமையாக போராடிவருகிறது. கொரோனா வைரஸிலிருந்து உயிர்களைக் காப்பாற்ற உலகமே தற்போது முயற்சி செய்து வருகிறது.

mOdi

வைரஸ் பாதிப்புக்குப் பிந்தைய உலகை இந்தியா முன்னின்று நடத்தவேண்டும். கொரோனா வைரஸ் மனிதர்களுக்கு நிறைய பாடங்களை கற்றுக்கொடுத்துள்ளது.இந்தியாவுக்கு முக்கியமான வாய்ப்பை இந்த சூழ்நிலை கொண்டு வந்திருக்கிறது. உலகில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களை இந்தியா உன்னிப்பாக கவனித்துவருகிறது” எனக் கூறினார்.