உலகைக் காக்க திணறும் அரசுகள்! – பாடம் கற்க சீமான் அறிவுரை

 

உலகைக் காக்க திணறும் அரசுகள்! – பாடம் கற்க சீமான் அறிவுரை

வல்லரசு நாடுகளே கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றன. நாளுக்கு நாள் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. கொரோனாவை எதிர்கொள்ள முடியாமல் உலக நாடுகள் திணறி வருவது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ட்வீட் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

உலகை ஐந்தே நாளில் அழிக்க முடியும் என்ற நாடுகள் உலகைக் காக்க திணறி வருகின்றன என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

corona-virus-patients

வல்லரசு நாடுகளே கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றன. நாளுக்கு நாள் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. கொரோனாவை எதிர்கொள்ள முடியாமல் உலக நாடுகள் திணறி வருவது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ட்வீட் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “உலகை அழித்து முடிக்க வேண்டுமென்றால் ஐந்து நாட்களிலேயே செய்து காட்டிருப்பார்கள். காப்பாற்ற வேண்டும் என்றவுடன் திணறிக் கொண்டிருக்கிறார்கள்.
அறிவியல் எப்போதும் அறவியலாகத்தான் இருக்கவேண்டுமேயொழிய அழிவியலாக இருக்கக் கூடாது. கொரோனோ நமக்கு நடத்தியிருக்கும் பெரும்பாடம்.அனைவரும் கற்போம்!”