உலகின் வயதான மனிதர் காலமானார்!

 

உலகின் வயதான மனிதர் காலமானார்!

உலகின் வயதான மனிதராக விளங்கிய மசாசோ நொனாகா நேற்று  காலமானார். அவருக்கு வயது 113.

ஜப்பான்: உலகின் வயதான மனிதராக விளங்கிய மசாசோ நொனாகா நேற்று  காலமானார். அவருக்கு வயது 113.

ஜப்பானின் ஹொக்கைடோ தீவு பகுதியில் உள்ள அஷோரா நகரில் வசித்து வந்தவர் மசாசோ நொனாகா. 1905 ஜூலை 25-ம் தேதி பிறந்த இவரைக் கடந்த ஆண்டு ஏப்ரம் 10-ம் தேதி  உலகின் மிக வயதான மனிதர் என்று அறிவித்து கின்னஸ் அமைப்பு அங்கீகாரம் அளித்தது. அதற்கான சான்றிதழை அந்த அமைப்பின் அதிகாரிகள் மசாசோவின் வீட்டுக்கே சென்று வழங்கினர்.  மசாசோவுக்கு 6 சகோதரர்களும்,  1 சகோதரியும் உள்ளனர். மசாசோ 1931-ல் ஹட்சுனோ என்பவரை மணந்தார். இந்தத் தம்பதிக்கு 5 பிள்ளைகள் உள்ளனர்.

இந்நிலையில் மசாசோ நொனாகா நேற்று காலமானார். ஸ்பெய்னின் ஒலிவெரா ஜனவரியில் தன்னுடைய 113வது வயதில் இறந்ததையடுத்து, மசாசோ நொனாகாவை உலகின் மிக வயதான மனிதர் என்று கின்னஸ் அமைப்பு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.