உலகின் ஒரே கேப்டன் ‘தல’ தோனி: அதிமுக அமைச்சர் பாராட்டு!
இந்த குறிப்பிடத்தக்க சாதனையை நிகழ்த்திய கேப்டன் கூல் தோனிக்கு பாராட்டுக்கள்’என்று பதிவிட்டுள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான மகேந்திர சிங் தோனி இந்திய அணிக்காக இரண்டு உலகக்கோப்பையை பெற்று தந்துள்ளார். தற்போது இந்திய அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகி ஒரு விக்கெட் கீப்பராக தனது பணியைச் சிறப்பாகச் செய்துவருகிறார். தற்போது விராட் கோலி இந்திய அணியின் கேப்டனாக வழி நடத்தி வருகிறார்.
மேலும் இக்கட்டான சூழ்நிலையில் தோனி ஒரு சீனியர் வீரராக ஆலோசனைகளை வீரர்களுக்கு வழங்கி வருகிறார். அதனால் தான் இந்த கூல் கேப்டனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
The only captain in the world to have won both the World Cups and Champions Trophy! The man who will always be fondly remembered as ‘Thala’ completes his 15 years of journey in International Cricket today. Congrats captain cool @msdhoni on this remarkable feat!#15YearsOfDhonism pic.twitter.com/kBNw0TnIqj
— SP Velumani (@SPVelumanicbe) December 23, 2019
இந்நிலையில் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் நுழைந்து, 15 ஆண்டுகளை வெற்றிகரமாக கடந்துள்ளார். இதையடுத்து அவரது ரசிகர்கள் இதை கொண்டாடி மகிழ்கின்றனர். இதுகுறித்து ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, உலகக் கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி இரண்டையும் வென்ற உலகின் ஒரே கேப்டன்! ‘தல’ என்று எப்போதும் அன்பாக நினைவுகூரப்படும் மனிதன் இன்று சர்வதேச கிரிக்கெட்டில் தனது 15 ஆண்டுகால பயணத்தை நிறைவு செய்கிறார். இந்த குறிப்பிடத்தக்க சாதனையை நிகழ்த்திய கேப்டன் கூல் தோனிக்கு பாராட்டுக்கள்’என்று பதிவிட்டுள்ளார்.