உலகின் அதிக வயதுடைய மனிதராக அறியப்பட்ட ஜப்பான் மனிதர் 112 வயதில் மரணம்

 

உலகின் அதிக வயதுடைய மனிதராக அறியப்பட்ட ஜப்பான் மனிதர் 112 வயதில் மரணம்

உலகில் தற்போது வாழ்பவர்களில் மிகவும் அதிக வயதுடைய மனிதராக அறியப்பட்ட ஜப்பானை சேர்ந்தவர் 112 வயதில் காலமானார்.

டோக்கியோ: உலகில் தற்போது வாழ்பவர்களில் மிகவும் அதிக வயதுடைய மனிதராக அறியப்பட்ட ஜப்பானை சேர்ந்தவர் 112 வயதில் காலமானார்.

உலகில் தற்போது வாழ்பவர்களில் மிகவும் அதிக வயதுடைய மனிதராக ஜப்பானைச் சேர்ந்த சிட்டெட்ஸூ வடனாபே (Chitetsu Watanabe) என்பவர் வாழ்ந்து வந்தார். அவர் நீயிகதா நகரில் கடந்த 1907-ஆம் ஆண்டு பிறந்தவர். தற்போது உலகில் வாழ்பவர்களில் அதிக வயதுடைய நபராக கருதப்பட்டு அவரது சாதனைக்காக கடந்த 12-ஆம் தேதி கின்னஸ் சாதனைக்கான சான்றிதழ் அளிக்கப்பட்டது.

ttn

இந்நிலையில், சிட்டெட்ஸூ வடனாபே வயோதிக மூப்பு காரணமாக கடந்த 23-ஆம் தேதி காலமானார். இந்த தகவலை கின்னஸ் அமைப்பு வெளியிட்டுள்ளது. மரணம் அடையும்போது அவருக்கு வயது 112 ஆண்டுகள் 344 நாட்கள் ஆகும்.