உலகளவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 2லட்சத்து 74ஆயிரத்து 655ஆக அதிகரிப்பு!

 

உலகளவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 2லட்சத்து 74ஆயிரத்து 655ஆக அதிகரிப்பு!

இந்த ஆபத்தான நோய்  தொற்றிலிருந்து  தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.  

கொரோனா வைரஸ் தற்போது  200ற்கும் மேற்பட்ட  நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய்  தொற்றிலிருந்து  தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.  

 

இதுவரை உலகம் முழுவதும் 39  லட்சத்து 35ஆயிரத்து 828  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதனால்  பல்வேறு நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் வரும்  மே  17  ஆம் தேதி வரை 144  தடை உத்தரவை மத்திய  அரசு நீட்டித்துள்ளது. 

இந்நிலையில், உலக அளவில் கொரோனா வைரசால் பலியானோர்  எண்ணிக்கை  2  லட்சத்தை   கடந்தது.  இதுவரை 2லட்சத்து 74  ஆயிரத்து 655  பேர் பலியாகி உள்ளனர்