உலகளவில் ஒரே நாளில் கொரோனா வைரஸுக்கு 862 பேர் பலி!

 

உலகளவில் ஒரே நாளில் கொரோனா வைரஸுக்கு 862 பேர் பலி!

தொற்றிலிருந்து  தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்  உருவான  கொரோனா வைரஸ் தற்போது 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய் தொற்றிலிருந்து  தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

ttn

இந்நிலையில் நேற்று ஒரே நாளில் ஒரு இந்தியர் உள்பட 862 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளதாக  உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்கள்  எண்ணிக்கை ஒரு லட்சத்து 90 ஆயிரத்து 873 ஆக அதிகரித்தது. வுஹான்  நகரில் தற்போது கொரோனா வீரியம் குறைந்து வருகிறது.

ttn

இதனால் புதிதாக நேற்று ஒருவர் மட்டுமே கொரோனாவால்  பாதிக்கப்பட்டார்.  ஆனால், சீனா முழுவதும் மேலும் 13 பேர் பலியாகியுள்ளார்கள். பிரான்சில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 6 ஆயிரத்து 600 ஆக அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் வீடுகளிலிருந்து வெளியே வர வேண்டாம் என்று பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் கேட்டுக்கொண்டுள்ளார்.