உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 22 ஆயிரத்தை தாண்டியது!

 

உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 22 ஆயிரத்தை தாண்டியது!

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்  உருவான  கொரோனா வைரஸ் தற்போது 198 நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய் தொற்றிலிருந்து  தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. 

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்  உருவான  கொரோனா வைரஸ் தற்போது 198 நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய் தொற்றிலிருந்து  தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.  இதனால்  பல்வேறு நாடுகளின் எல்லைகள் மூடப்பட்டுள்ளன.  இந்தியாவிலும் பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  மேலும் கோயில்கள், தியேட்டர்கள், வணிக வளாகங்கள், பூங்காக்களை  வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி மூடவைக்கக்கோரி அரசு உத்தரவிட்டுள்ளது. 

coronavirus

இந்நிலையில் கொரோனாவிற்கு தற்போதைய நிலவரப்படி  உலகளவில் பலியானவர்களின் எண்ணிக்கை 22,022 ஆக உயர்ந்துள்ளது. உலக அளவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4 லட்சத்து 86,702 ஆக உள்ள நிலையில் சுமார் ஒரு லட்சத்து 17 ஆயிரம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சீனாவில் 3 ஆயிரத்து 287 பேரும், இத்தாலியில் 7 ஆயிரத்து 503 பேரும், அமெரிக்காவில் ஆயிரத்து 1036 பேரும், ஸ்பெயினில் 4 ஆயிரத்து 89 பேரும் உயிரிழந்துள்ளனர்.