உலகத்துல யாருமே செய்யாததை நீங்க அடிக்கடி செய்றீங்க – கோர்ட் டூ ரிசர்வ் வங்கி!

 

உலகத்துல யாருமே செய்யாததை நீங்க அடிக்கடி செய்றீங்க – கோர்ட் டூ ரிசர்வ் வங்கி!

உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு இந்திய ரிசர்வ் வங்கி அடிக்கடி ரூபாய் நோட்டுகளை மாற்றுவது ஏன் என்பதற்கான காரணத்தை விளக்கும்படி ரிசர்வ் வங்கிக்கு நோட்டிஸ் அனுப்பியுள்ளது.

ரூபாய் நோட்டுகளில் அடிக்கடி மாற்றம் செய்வது ஏன் என ரிசர்வ் வங்கிக்கு மும்பை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. ’தேசிய பார்வை குறைபாடுள்ளோர் சங்கத்தினர்’ மும்பை உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளது.

New Currency Notes

ரூபாய் நோட்டுகள், நாணயங்களில் அளவுகளிலும் வடிவமைப்பிலும் அடிக்கடி ரிசர்வ் வங்கி மாறுதல் செய்கிறது. ரூபாய் நோட்டுகளும் நாணயங்களும் அடிக்கடி மாறுவதால், அவற்றை தடவிப்பார்த்து தெரிந்துகொள்ளும் தங்களுக்கு சிரமமாக இருப்பதாகவும், பார்வை குறைபாடுள்ளோர் சங்கத்தினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். அவர்களின் கோரிக்கையை கனிவோடு கேட்ட நீதிமன்றம், உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு இந்திய ரிசர்வ் வங்கி அடிக்கடி ரூபாய் நோட்டுகளை மாற்றுவது ஏன் என்பதற்கான காரணத்தை விளக்கும்படி ரிசர்வ் வங்கிக்கு நோட்டிஸ் அனுப்பியுள்ளது.