உலகத்துக்கே நீங்க யாரென்று தெரியுமே… குடியுரிமை போராட்டம் குறித்து பி.சி.ஶ்ரீராம் ட்வீட்

 

உலகத்துக்கே நீங்க யாரென்று தெரியுமே… குடியுரிமை போராட்டம் குறித்து பி.சி.ஶ்ரீராம் ட்வீட்

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கோலமிட்டதற்காக சென்னையில் நேற்று சிலர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். ஆனால், இந்த சம்பவம் நாடு முழுக்க பரவிவருகிறது.
இந்த நிலையில் பிரபல திரைப்பட ஒளிப்பதிவாளர் பி.சி.ஶ்ரீராம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்

pc sree

. அதில், “கருத்துக்களை வெளியிடும் ஒரு கருவியாக, ஆயுதமாக கோலம் இருக்கும் என்று என்றைக்கும் எப்போதும் நினைத்ததே இல்லை. ஒவ்வொருவர் மனதில் எந்த அளவுக்கு ஆழமாக இந்த விஷயம் உள்ளது என்பது தெரிகிறது.

மக்களின் போராட்டத்துக்கு எந்த ஒரு நிறத்தையும் கொடுக்க முடியாது. மொத்த உலகமும் உங்களின் மறைமுக செயல்திட்டத்தைத் தெரிந்துவைத்துள்ளன” என்று குறிப்பிட்டுள்ளார்.