உலகத்திலேயே தி.மு.க,வில் மட்டும்தான் இப்படி நடக்கும்… போஸ்டர் ஒட்ட ஆள் பிடிக்கும் உதயநிதி..!

 

உலகத்திலேயே தி.மு.க,வில் மட்டும்தான் இப்படி நடக்கும்… போஸ்டர் ஒட்ட ஆள் பிடிக்கும் உதயநிதி..!

அந்த கட்சியில் தொண்டனோட வாரிசுகள் கடைசி வரை போஸ்டர் ஒட்டுகிற வேலையை மட்டும் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டனர்.

தி.மு.க.,வையும் குடும்ப அரசியலையும் பிரிக்கவே முடியாது. அக்கட்சியில் மாநில அளவில் கருணாநிதி குடும்பம் மூன்றாவது தலைமுறையாக அரசியல் செய்து வருகிறது. மாவட்ட அளவில் செயலர்கள், தங்கள் குடும்ப வாரிசுகளை களமிறக்கிட்டு வருகிறார்கள். தி.மு.க., தலைவர் ஸ்டாலின் மகன், உதயநிதி, அக்கட்சி இளைஞரணி மாநில செயலரா இருக்கிறார்.

பொன்முடி, துரைமுருகன், ஆற்காடு வீராசாமி, பெரியசாமி உள்ளிட்ட பலரும் தங்களின் வாரிசுகளை தி.மு.க.,வில் களமிறக்கி இருக்கிறார்கள். முன்னாள் அமைச்சர் திருச்சி கே.என்.நேரு மட்டும் தன் தம்பி ராமஜெயம் படுகொலைக்குப் பின் தன் வாரிசை களமிறக்க தயக்கம் காட்டினார்.

இப்போது தனது மகனை இளைஞரணியில சேர்க்க முடிவு செய்திருக்கிறார். அந்த கட்சியில் தொண்டனோட வாரிசுகள் கடைசி வரை போஸ்டர் ஒட்டுகிற வேலையை மட்டும் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டனர்.