உலகக்கோப்பை 2019 ; இங்கிலாந்திற்கு எதிராக பந்துவீச்சை தேர்வு செய்தது தென் ஆப்ரிக்கா !! 

 

உலகக்கோப்பை 2019 ; இங்கிலாந்திற்கு எதிராக பந்துவீச்சை தேர்வு செய்தது தென் ஆப்ரிக்கா !! 

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து தென் ஆப்ரிக்கா இடையேயான இன்றைய போட்டியில் டாஸ் வென்றுள்ள தென் ஆப்ரிக்கா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. 

கிரிக்கெட் உலகின் வல்லரசை தீர்மானிக்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் இன்று துவங்குகிறது. 

 

worldcup

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து தென் ஆப்ரிக்கா இடையேயான இன்றைய போட்டியில் டாஸ் வென்றுள்ள தென் ஆப்ரிக்கா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. 

கிரிக்கெட் உலகின் வல்லரசை தீர்மானிக்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் இன்று துவங்குகிறது. 

இந்த தொடரின் முதல் போட்டியான இன்றைய போட்டியில் தென் ஆப்ரிக்கா அணியும், இங்கிலாந்து அணியும் மோதுகின்றன. 

eng vs sa

லண்டனின் ஓவல் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள தென் ஆப்ரிக்கா அணியின் கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். 

இன்றைய போட்டிக்கான தென் ஆப்ரிக்கா அணியில் டூ பிளசிஸ், ஆம்லா, டி.காக் போன்ற சீனியர் வீரர்கள் பலருடன் நிகிடி போன்ற இளம் வீரர்களும் இடம்பெற்றுள்ளனர். 

அதே போல் இங்கிலாந்து அணியில் ஜோப்ரா ஆர்சர், லியாம் ப்ளங்கட் போன்ற இளம் வீரர்கள் பலர் இடம்பெற்றுள்ளனர். 

இன்றைய போட்டிக்கான இங்கிலாந்து அணி; 

ஜேசன் ராய், பாரிஸ்டோவ், ஜோ ரூட், இயான் மோர்கன், பென் ஸ்டோக்ஸ், ஜாஸ் பட்லர், மொய்ன் அலி,கிரிஸ் வோக்ஸ், லியாம் ப்ளங்கட், ஜோப்ரா ஆர்சர், அடில் ரசீத். 

இன்றைய போட்டிக்கான தென் ஆப்ரிக்கா அணி ; 

ஹசீம் ஆம்லா, டி.காக், மார்கரம், டூ பிளசிஸ், வேண்டர் டூசன், டூமினி, பெலாகுலயே, டுவைன் பேட்ரியஸ்,ரபாடா, நிகிடி, இம்ரான் தாஹிர்.