உலகக்கோப்பையில் இருந்து ஷிகர் தவான் விலகல்; ரிஷப் பண்ட் இன் !!

 

உலகக்கோப்பையில் இருந்து ஷிகர் தவான் விலகல்; ரிஷப் பண்ட் இன் !!

காயம் காரணமாக கடந்த இரண்டு போட்டிகளில் விளையாடாத ஷிகர் தவான் எஞ்சியுள்ள போட்டிகளில் இருந்து முழுமையாக விலகியுள்ளார். 
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலிய அணியுடனான போட்டியில் சதம் அடித்து அசத்திய ஷிகர் தவான், அதே போட்டியில் காயமும் அடைந்தார். 

காயம் காரணமாக கடந்த இரண்டு போட்டிகளில் விளையாடாத ஷிகர் தவான் எஞ்சியுள்ள போட்டிகளில் இருந்து முழுமையாக விலகியுள்ளார். 
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலிய அணியுடனான போட்டியில் சதம் அடித்து அசத்திய ஷிகர் தவான், அதே போட்டியில் காயமும் அடைந்தார். 

rishabh pant

இதனால் கடந்த இரண்டு போட்டிகளில் விளையாடாத ஷிகர் தவான் அடுத்த ஓரிரு போட்டிகளுக்குள் மீண்டும் ரீ எண்ட்ரீ கொடுப்பார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஷிகர் தவான் எஞ்சியுள்ள போட்டிகளில் இருந்து முழுமையாக விலகுவதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. 
ஷிகர் தவான் காயத்தில் இருந்து முழுமையாக குணமடைய மேலும் சில வாரங்கள் தேவை என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியன் பேரிலேயே இந்திய கிரிக்கெட் வாரியம் இத்தகைய முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. அதே போல் ஷிகர் தவானுக்கு பதிலாக இளம் வீரரான ரிஷப் பண்ட் அணியில் சேர்க்கப்படுவதாகவும் இந்திய கிரிக்கெட் வாரியம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.