உற்சாகத்தில் கார்த்தி; வாழ்த்து கூறிய சூர்யா: சிவக்குமார் குடும்பத்தில் என்ன விஷேசம்?!

 

உற்சாகத்தில் கார்த்தி; வாழ்த்து கூறிய  சூர்யா: சிவக்குமார் குடும்பத்தில் என்ன விஷேசம்?!

ஜோதிகா, கார்த்தி இருவரும்  முதன்முறையாக இணைந்து நடிக்கும் படத்திற்காக நடிகர் சூர்யா வாழ்த்து கூறியுள்ளார். 

சென்னை: ஜோதிகா, கார்த்தி இருவரும்  முதன்முறையாக இணைந்து நடிக்கும் படத்திற்காக நடிகர் சூர்யா வாழ்த்து கூறியுள்ளார். 

நடிகர் கார்த்தி  தேவ் திரைப்படத்தையடுத்து  இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘கைதி’  படத்தில்  நடித்து வருகிறார்.  இதை தொடர்ந்து தற்போது  நடிகர் கார்த்தியும் அவரது அண்ணியான நடிகை ஜோதிகாவும் இணைந்து புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.

karthi

பாபநாசம் படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவாகும் இந்த  த்ரில்லர் படத்தில்  கார்த்தியும் ஜோதிகாவும்  அக்கா – தம்பியாக நடிக்கவுள்ளனர். இதனால் முதன்முறையாகத் திரையில் இவர்களைப் பார்க்க  ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். இந்தப் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க மலையாள நடிகர் அன்சன் பால் இணைந்துள்ளார். 

 

Thrilled to share screen space with Anni for the first time 🙂 & looking forward to work with #JeethuJoseph sir. #Sathyaraj sir brings more strength to us. With all your blessings shoot begins today. #Jyotika @govind_vasantha @rdrajasekar @ansononline #ParallelMindsFilms pic.twitter.com/uqPWoCnygr

— Actor Karthi (@Karthi_Offl) April 27, 2019

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. இது குறித்து நடிகர் கார்த்தி, தனது டிவிட்டர் பக்கத்தில், முதன்முறையாக அண்ணியுடன் சேர்ந்து நடிக்க இருக்கிறேன். உங்கள் அனைவரின் ஆசீர்வாதத்துடன் இன்று முதல் படப்பிடிப்பு தொடங்குகிறது’ பதிவிட்டுள்ளார். இவரின் பதிவுக்கு பதிலளித்துள்ள நடிகர் சூர்யா, ‘இது ஒரு சிறப்பான தருணம். உன்னையும், ஜோவையும் திரையில் ஒன்றாக பார்ப்பது உற்சாகமாக இருக்கிறது. படக்குழுவுக்கு வாழ்த்துகள்’  என்று வாழ்த்து  கூறியுள்ளார். 

jo

இப்படம் வரும் அக்டோபரில் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது. முன்னதாக அறிமுக இயக்குநர் எஸ்.ராஜ் இயக்கத்திலும், குலேபகாவலி படத்தை இயக்கிய கல்யாண் இயக்கத்திலும் ஜோதிகா நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.