உறுதியான சஞ்சீவ் – மானசா காதல்: முதலில் காதலை சொன்னது யார்? உண்மையை உடைத்த சஞ்சீவ்

 

உறுதியான சஞ்சீவ் – மானசா காதல்: முதலில் காதலை சொன்னது யார்? உண்மையை உடைத்த சஞ்சீவ்

‘ராஜா ராணி’ சீரியலில் நடித்து வரும் ஆல்யா மானசா மற்றும் சஞ்ஜீவ் கார்த்திக் ஜோடி தங்கள் காதல் குறித்து மனம் திறந்துள்ளனர்.

சென்னை: ‘ராஜா ராணி’ சீரியலில் நடித்து வரும் ஆல்யா மானசா மற்றும் சஞ்ஜீவ் கார்த்திக் ஜோடி தங்கள் காதல் குறித்து மனம் திறந்துள்ளனர்.

‘ராஜா ராணி’ சீரியலில் நடித்து வரும் ஆல்யா மானசாவுக்கு ரசிகர்கள் ஏராளம்.சீரியலையும் தாண்டி அவரை இன்ஸ்டாகிராமில் 13 லட்சத்திற்கும் அதிகமானோர் பாலோ செய்து வருகின்றனர்.  அதற்கு முக்கியக் காரணம், அடிக்கடி அவர் வெளியிட்டு வரும் டப்ஸ்மாஷ் வீடியோக்கள் தான். முன்னதாக மானஸ் என்பவரைக் காதலித்து வந்த மானசா கருத்து வேறுபாட்டின் காரணமாக அவரைப் பிரிந்துள்ளார். இதற்கு முக்கிய காரணம் ராஜா ராணி சீரியலில் அவருடன் நடிக்கும் சஞ்சீவ் கார்த்திக் உடன்  மானசா  நெருக்கமாக இருந்ததே என்று கூறப்படுகிறது. 

இந்நிலையில் நடிகை மானசா , சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சஞ்சீவுடனான காதலை உறுதி செய்துள்ளார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற சஞ்சீவ் மற்றும் மானசாவிடம், முதலில் காதலை வெளிப்படுத்தியது யார் என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதற்கு சஞ்சீவ், மானசா  தான் என்று கூறியுள்ளார்.  சஞ்சீவ் மானசாவை செல்லமாக ஆளு என்றும் மானசா, சஞ்ஜீவை பிள்ளையார் என்றும் தான் செல்லமாக அழைப்பார்கள் என்று அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார். இதில் கவனிக்கப்பட வேண்டியது என்னவெனில்  மானசாவின் முன்னாள் காதலரான மானஸிடம் கூட மானசா தான் முதலில் காதலை தெரிவித்தார்.

முன்னதாக மானசாவின் முன்னாள்  காதலர் மானஸ், எனக்கும் மானசாவுக்கும் இடையே ஏற்பட்ட விரிசலுக்கு நான் காரணம் கிடையாது.அதனால் அது குறித்து பயப்படவோ, வெட்கப்படவோ மாட்டேன் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.