உறுதியான அதிமுக – பாஜக கூட்டணி: திவாகரன் மகன் ஜெயானந்த் தகவல்!

 

உறுதியான அதிமுக – பாஜக கூட்டணி: திவாகரன் மகன்  ஜெயானந்த்  தகவல்!

தமிழகத்தில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் என்று  திவாகரன் மகன் ஜெயானந்த் கூறியுள்ளார்.

சென்னை: தமிழகத்தில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் என்று  திவாகரன் மகன் ஜெயானந்த் கூறியுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கில் முக்கிய எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஒருங்கிணைந்துள்ளன.அதேசமயம், நிச்சயம் வென்றாக வேண்டும் என்ற மும்முரத்துடன் பாஜகவும் களத்தில் இறங்கி பணியாற்ற துவங்கியுள்ளது. அதன் தொடர்ச்சியாக, தமிழக கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும் முயற்சியில் களமிறங்கியுள்ளது. 

stalin

காங்கிரஸ், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், இடதுசாரிகள் உள்ளிட்டோருடன் திமுக கூட்டணி அமைக்கும் என்று தெரிகிறது. அதேபோல், அதிமுக, பாஜக இடையே கூட்டணி அமைவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

palanisamy

இத்தகைய பரபரப்பான சூழலில் திவாகரன் மகன் ஜெயானந்த் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சென்னையில் நேற்று  சந்தித்துள்ளார். இது குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த ஜெயானந்த், ‘கூட்டணி குறித்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயலிடம் பேசினேன். அதிமுக-பாஜக கூட்டணி அமைவது 90 சதவீதம் உறுதி ஆகியுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும். அதிமுக தலைமையில் மெகா கூட்டணி தமிழகத்தில் அமையும். ஜெயலலிதா உள்ள போது இருந்ததைப்போன்ற வலிமையான ஒருங்கிணைந்த அதிமுக மீண்டும் உருவாகும். அதில் தினகரனை தவிர்த்து அதிமுகவில் இருந்து பிரிந்த அனைவரும் மீண்டும் கட்சியில் இணைவார்கள். அதிமுகவுடன் முறைப்படி இணைவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் அது நடைபெறும்’என்றார்.