உருவத்தை வைத்து 45 வயது பெண்ணை சொத்துக்காக திருமணம் செய்ததாக வாட்ஸ்அப் வதந்தி :11 வாட்ஸ்அப் அட்மின்கள் கைது!

 

உருவத்தை வைத்து 45 வயது பெண்ணை சொத்துக்காக திருமணம் செய்ததாக வாட்ஸ்அப் வதந்தி :11 வாட்ஸ்அப் அட்மின்கள் கைது!

இளம் தம்பதியின் திருமண புகைப்படத்தை வைத்து வாட்ஸ்அப்பில்  வதந்தி பரப்பிய 11 வாட்ஸ்அப் அட்மின்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கேரளா: இளம் தம்பதியின் திருமண புகைப்படத்தை வைத்து வாட்ஸ்அப்பில்  வதந்தி பரப்பிய 11 வாட்ஸ்அப் அட்மின்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கேரள மாநிலம் செருப்புழா பகுதியைச் சேர்ந்தவர் அனூப் செபாஸ்டியன். இவர் தனது கல்லூரித் தோழியான ஜுபி ஜோசப்  என்ற பெண்ணை காதலித்து  கடந்த 9-ம் தேதி திருமணம் செய்தார். இதையடுத்து இவர்களின் புகைப்படத்தை நாளிதழில் வெளியிட்டு மணமக்கள் குடும்பத்தினர் விளம்பரம் செய்திருந்தனர்.

couple

இதையடுத்து வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இவர்களது புகைப்படங்களை வைத்து 47 வயதான பெண்ணை சொத்துக்காக திருமணம் செய்த 29 வயது இளைஞர் என்று  செய்திகள் பரப்பப்பட்டன

couple

இந்நிலையில் இதைக்கண்டு வேதனை அடைந்த புதுமண தம்பதியினர் போலீசில் புகாரளித்தனர். தற்போது தம்பதி குறித்து பொய்ச் செய்தி பரப்பியதாக 11 வாட்ஸ்அப் அட்மின்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இன்னும் ஏராளமானோர் கைது செய்யப்படுவார்கள் என்றும் போலீஸார் தெரிவித்துள்ளனர். 

couple

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மணப்பெண் ஜுபி ஜோசப் , ‘நான் சிறுவயதிலிருந்தே சற்று குண்டாக இருப்பேன். திருமணத்தில் பட்டுப்புடவை கட்டியிருந்ததால், புகைப்படத்தில் அப்படித் தெரிந்தது. அதற்காக வதந்தியை பரப்பி எங்களை மிகுந்த மன வேதனை அடைய வைத்துள்ளனர். இந்தியாவில் திருமணம் முடிக்க பெண்ணுக்கு 18 வயது, ஆணுக்கு 21 வயது போதும். அப்படி இருக்கையில், எங்கள் வயதுகுறித்து இவர்கள் ஏன் ஆராய வேண்டும். சட்டப்படி அவர்கள்மீது நடவடிக்கை  எடுப்பேன்’ என்று தெரிவித்துள்ளார்.