உயிரை காப்பாற்ற போராடிய ஆம்புலன்ஸ் டிரைவர்: கடைசியில் அவருக்கு நேர்ந்த சோகம் இதுதான்!

 

உயிரை காப்பாற்ற போராடிய ஆம்புலன்ஸ் டிரைவர்: கடைசியில் அவருக்கு நேர்ந்த  சோகம் இதுதான்!

ஒரு உயிரை காப்பாற்ற விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் மீது ஆட்டோ மோதியதில் ஆம்புலன்ஸ் டிரைவர்  படுகாயம் அடைந்தார்.  

சிவகங்கை: ஒரு உயிரை காப்பாற்ற விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் மீது ஆட்டோ மோதியதில் ஆம்புலன்ஸ் டிரைவர்  படுகாயம் அடைந்தார்.  

108

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்தவர் இளைஞர் கீர்த்தி ராஜன். 20 வயதான  கீர்த்தி ராஜனுக்கு திடீர் மூச்சு திணறல் ஏற்பட்டதால், உடனடியாக 108 ஆம்புலன்ஸுக்கு  தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ஆம்புலன்ஸ் கீர்த்தி ராஜனை ஏற்றி கொண்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு விரைந்தது. இருப்பினும் கீர்த்தி ராஜனுக்கு உடல்நிலை மோசமாகிக் கொண்டே போனது.   

acc

இதனால் சுதாரித்துக் கொண்ட  ஆம்புலன்ஸ் டிரைவர், அரசு மருத்துமனைக்கு செல்லாமல், திருப்புவனத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸை கொண்டுச் சென்றார். மருத்துவமனைக்குச் சென்றவுடன் கீர்த்தி ராஜனை  வண்டியில் இறங்கியுள்ளார். அப்போது அந்த வழியாக ஆட்டோ ஒன்று எதிர்பாராத விதமாக ஆம்புலன்ஸ் மீது  மோதியுள்ளது. இதில் ஆம்புலன்ஸ் டிரைவருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் கீர்த்தி ராஜனும் உயிரிழந்துள்ளார். இந்த  சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.