உயிரைக் காப்பாற்ற கெஞ்சும் ஓவியர்… அலட்சியப்படுத்தும் போலீசார்!

 

உயிரைக் காப்பாற்ற கெஞ்சும் ஓவியர்… அலட்சியப்படுத்தும் போலீசார்!

தமிழகத்தில் கடந்த சில வருடங்களாகவே சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப் போயிருக்கிறது என்கிற பேச்சு பொதுமக்களிடையே பரவலாக எழுந்துள்ளது. அதனை நிஜம் தான் என்றும் சொல்லும் விதமாக அடுத்தடுத்து கொலைகளும், கொள்ளைகளும் நடந்து வருகின்றன. குறிப்பாக மதுரையில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு ரவுடிகளும், கொலைக்கார கும்பல்களும் அதிக அட்டூழியங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால் பொதுமக்களிடையே ஒரு விதமான பதற்றம் நீடித்து வருகிறது.

தமிழகத்தில் கடந்த சில வருடங்களாகவே சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப் போயிருக்கிறது என்கிற பேச்சு பொதுமக்களிடையே பரவலாக எழுந்துள்ளது. அதனை நிஜம் தான் என்றும் சொல்லும் விதமாக அடுத்தடுத்து கொலைகளும், கொள்ளைகளும் நடந்து வருகின்றன. குறிப்பாக மதுரையில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு ரவுடிகளும், கொலைக்கார கும்பல்களும் அதிக அட்டூழியங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால் பொதுமக்களிடையே ஒரு விதமான பதற்றம் நீடித்து வருகிறது.

painter

சமீப நாட்களாக மதுரையில், பழிக்குப் பழி, கொலைச் செய்து விடுவோம் என்கிற ரீதியில் ஆங்காங்கே போஸ்டர்களை ஒட்டிவிட்டு, போஸ்டரில் சொல்லப்படுவது போலவே சம்பந்தப்பட்ட நபரைக் கொலைச் செய்யும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், மதுரையில் கொலை வழக்கில் துப்பு கொடுத்ததற்காக கடந்த 3 வருடங்களாக தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு வருவதாக கண்ணீருடன் ஓவியர் ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது. 
மதுரை எல்லீஸ் நகரைச் சேர்ந்தவர் சுந்தர். ஓவியரான இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வட மாநில இளைஞர் ஒருவரை அதே பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் கொடூரமாக வெட்டிக் கொலை செய்த சம்பவத்தை நேரில் பார்த்து, காவல்துறையினரிடம் சாட்சியாக கூறியதாகவும், ஜாமீனில் வெளியே இளைஞர்கள் தனக்குத் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுவதாகவும் அந்த வீடியோவில் கூறியுள்ளார். வரும் தீபாவளியன்று தன்னை கொல்வதற்கு பலூன் சதீஷ், ஒண்டிப்புலி கார்த்திக், காசி ஆகிய மூவரும் திட்டமிட்டிருப்பதாகவும், தனது உயிரை காப்பாற்ற வேண்டும் என்றும் கண்ணீர் மல்க வெளியிட்டுள்ள வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. போலீசார் நடவடிக்கை எடுப்பாரா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.