உயிருக்கு போராடிய இருவர்: ஜீப்பில் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற காவல் ஆய்வாளர்!

 

உயிருக்கு போராடிய இருவர்: ஜீப்பில் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற காவல் ஆய்வாளர்!

திண்டுக்கல் மாவட்டம் துவரங்குறிச்சி கிடாரிப்பட்டியை சேர்ந்த ஜெயராமன், சிவராமன் ஆகிய இருவரும் பைக்கில் சென்றுகொண்டிருந்த நிலையில்  மங்களாம்பட்டி அருகே அவர்களின் பைக் திடீரென பனைமரத்தில் மோதி விபத்தில் சிக்கியது. இதில் அவர்கள் இருவரும் ரத்த வெள்ளத்தில் மிதந்தனர். 

tt

அந்த சமயம் பார்த்து நத்தம் அருகே செந்துறை பகுதியில் நத்தம் காவல் ஆய்வாளர் ராஜமுரளி ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்தார்.  ஜெயராமன், சிவராமன் இருவரும் விபத்தில் சிக்கியதை கண்ட அவர், உடனடியாக அவர்களை மீட்டு ஜீப்பில் செந்துறை ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தார். 

vv

கடுமையான பணி சூழலுக்கு மத்தியில்   காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சேர்த்த காவல் ஆய்வாளர் ராஜமுரளிக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.