உயிருக்கு ஆபத்தான நிலையில் பிரபல நடிகை! இடைவிடாத படப்பிடிப்பால் மாரடைப்பு!

 

உயிருக்கு ஆபத்தான நிலையில் பிரபல நடிகை! இடைவிடாத படப்பிடிப்பால் மாரடைப்பு!

தமிழ் சினிமாவில் நடிக நடிகைகளின் புகழை மட்டுமே ரசிகர்கள் பார்க்கிறார்கள். அந்த புகழ் வெளிச்சத்திற்காக நடிகர், நடிகையர்கள் கொடுக்கும் விலை கொஞ்சமானது கிடையாது. சரியான நேரத்திற்கு உணவை உட்கொள்ளாதது, இடைவிடாத படப்பிடிப்பு, நேரத்திற்கு தூங்க முடியாமல், இரவு முழுவதும் படப்பிடிப்பு, ஓய்வில்லாத தொடர் பயணம் என்று அந்த புகழ் வெளிச்சத்திற்குப் பின்னால் அவர்களின் அசுரத்தனமான உழைப்பு இருப்பது பெரும்பாலான ரசிகர்களுக்குத் தெரிவதில்லை.

தமிழ் சினிமாவில் நடிக நடிகைகளின் புகழை மட்டுமே ரசிகர்கள் பார்க்கிறார்கள். அந்த புகழ் வெளிச்சத்திற்காக நடிகர், நடிகையர்கள் கொடுக்கும் விலை கொஞ்சமானது கிடையாது. சரியான நேரத்திற்கு உணவை உட்கொள்ளாதது, இடைவிடாத படப்பிடிப்பு, நேரத்திற்கு தூங்க முடியாமல், இரவு முழுவதும் படப்பிடிப்பு, ஓய்வில்லாத தொடர் பயணம் என்று அந்த புகழ் வெளிச்சத்திற்குப் பின்னால் அவர்களின் அசுரத்தனமான உழைப்பு இருப்பது பெரும்பாலான ரசிகர்களுக்குத் தெரிவதில்லை.
தமிழ், தெலுங்கு, இந்தி சினிமாக்களில் அதிகமான பாடல்களுக்கு நடனமாடி வரும் நடிகை கெஹானா.

actress

தமிழிலும், ‘பேய்கள் ஜாக்கிரதை’ படத்தில் ஒரு பாடலுக்கு இவர் நடனமாடியுள்ளார்.  மூன்று மொழிகளிலும் திரைப்படங்களில் தொடர்ந்து பணியாற்றி வந்ததால், சென்னை, மும்பை, ஹைதராபாத், பெங்களூரு என்று தொடர் பயணங்களிலேயே எப்போது இருப்பார் கெஹானா. இந்நிலையில், தற்போது இவர் நடித்து வரும் ஒரு வெப் சீரியலில் சரியாக சாப்பிடாமல் இடைவெளி இல்லாமல் தொடர்ந்து 48 மணி நேரம் நடித்துக் கொண்டு இருந்ததால், படப்பிடிப்பிலேயே திடீரென இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. மும்பையில் படப்பிடிப்பில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பினால் உடனடியாக படக்குழுவினர் கெஹானாவை அருகில் உள்ள ரக்ஷா மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கே கெஹானாவை பரிசோதித்த மருத்துவர்கள், கெஹானாவிற்கு சர்க்கரை நோய் இருப்பதாகவும், அவருடைய  பிபி மிகவும் குறைவாக இருப்பதாகவும் தெரிவித்தனர். இதை தொடர்ந்து  மூச்சு விடுவதில் பிரச்சனை இருப்பதால் சுவாச குழாய் பொருத்தப்பட்டு அவர் தீவிர சிகிக்சை பிரிவில் சிகிக்சை பெற்று வருகிறார்.