உயர்வகுப்பினர் வீட்டருகே இயற்கை உபாதை கழிக்கச் சென்ற பட்டியலினச் சிறார்கள் அடித்துக் கொலை!

 

உயர்வகுப்பினர் வீட்டருகே இயற்கை உபாதை கழிக்கச் சென்ற பட்டியலினச் சிறார்கள் அடித்துக் கொலை!

உயர்வகுப்பினர் வீட்டருகே இயற்கை உபாதை கழிக்கச் சென்ற பட்டியலினச் ‌சிறார்கள் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் மத்தியப்பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது. 

உயர்வகுப்பினர் வீட்டருகே இயற்கை உபாதை கழிக்கச் சென்ற பட்டியலினச் ‌சிறார்கள் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் மத்தியப்பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது. 

மத்திய பிரதேசம் மாநிலம் சிவபுரி மாவட்டம் பாக்தேதி கிராமத்தைச் சேர்ந்த பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்த அவினாஷ் மற்றும் ரோஷினி ஆகியோர் கடந்த புதனன்று அதிகாலை 5 மணிக்கு இயற்கை உபதை கழிப்பதற்கு தங்களின் வீட்டின் அருகில் உள்ள பகுதிக்கு சென்றிருக்கின்றனர். உயர்வகுப்பு சாதியைச் சேர்ந்த ஹக்கம் சிங் யாதவ் என்பவருக்கு சொந்தமான வீட்டின் அருகே உள்ள அந்த இடத்தில் ஏன் இயற்கை உபாதை கழிக்க வந்தீர்கள் என்று கூறி அந்த நபர், இரு சிறார்களையும் மிகக் கொடூரமாக தாக்கியுள்ளார். அவருடன் சேர்ந்து அவரது சகோதரர் ராமேஷ்வரும் கட்டைக் கொண்டு சிறார்களை தாக்கியுள்ளார்.

Murder

இருவரின் அழுகுரல் சத்தம் கேட்டு உறவினர்கள் வருவதற்குள் சிறார்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.. இந்தக் கொடூரச் சம்பவம் தொடர்பாக கைது செய்து விசாரிக்கும் போது, கடவுள் தான் சிறார்கள் 2 பேரையும் கொல்லச் சொன்னார் என ஹக்கம்சிங் யாதவ் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த கொடூர கொலைச் சம்பவம் தொடர்பாக கடும் கண்டனம் தெரிவித்த முதலமைச்சர் கமல்நாத், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.