‘உன் பொண்டாட்டியின் நடத்தை சரியில்லை’.. ஜோசியர் பேச்சைக் கேட்டு மனைவியை அரிவாளால் வெட்டிய கணவர் மரணம் !

 

‘உன் பொண்டாட்டியின் நடத்தை சரியில்லை’.. ஜோசியர் பேச்சைக் கேட்டு மனைவியை அரிவாளால் வெட்டிய கணவர் மரணம் !

மிகுந்த கோபத்துடன் சென்ற மாரியப்பன், காளியம்மாளை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார்.

தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் அருகே உள்ள குலசேகரன் கோட்டை கிராமத்தில் வசித்து வருபவர்கள் மாரியப்பன்- காளியம்மாள் தம்பதி. காளியம்மாள் பருத்திக் காட்டில் வேலை செய்து வருகிறார். இவர் வழக்கம் போல நேற்று வேலைக்குச் சென்றுள்ளார். அங்கு மிகுந்த கோபத்துடன் சென்ற மாரியப்பன், காளியம்மாளை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதனைக் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்த, காளியம்மாளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். 

ttn

காளியம்மாளை வெட்டி விட்டு வீட்டிற்கு சென்ற மாரியப்பன் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் மாரியப்பனின் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

ttn

இது தொடர்பாக காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், புதிய வீடு கட்டுவதற்காக மாரியப்பன் ஜோசியரிடம் சென்றதாகவும், அப்போது ஜோசியர் அவரது மனைவியின் நடத்தை சரியில்லை என்று கூறியதால் ஆத்திரமடைந்து காளியம்மாளைக் கொள்ள முயன்றார் என்றும் அந்த குற்ற உணர்ச்சியில் தானும் தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரிய வந்துள்ளது. இது குறித்து காவல்துறையினர் விசாரணையைத் தொடர்ந்து வருகின்றனர். மேலும், காளியம்மாள் பலத்த காயங்களுடன் உயிர் தப்பியதால் அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.