‘உன் தங்கச்சிய தூக்கிட்டு போய் தாலி கட்டுவேன்டா…அப்படி நடந்தா உன் தலை உன்கிட்ட இருக்காது’ : டிக் டோக் சவாலால் அரங்கேறிய நெல்லை படுகொலை!

 

‘உன் தங்கச்சிய தூக்கிட்டு போய் தாலி கட்டுவேன்டா…அப்படி நடந்தா உன் தலை உன்கிட்ட இருக்காது’ : டிக்  டோக் சவாலால்  அரங்கேறிய நெல்லை படுகொலை!

இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டதே இந்த கொலைக்கு காரணம் என்று சந்தேகிக்கப்பட்டது. 

கடந்த சில நாட்களுக்கு முன்பாக நெல்லை மாவட்டம் நாங்குநேரியை அடுத்துள்ள மறுகால் குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த நம்பிராஜன் என்ற இளைஞர் குறுக்குத்துறை ரயில்வே கேட் பகுதியில் தலைதுண்டிக்கப்பட்டு கொடூரமாக இறந்து கிடந்தார். இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயதான வான்மதியை காதலித்து வந்த நிலையில் பெண்ணின் வீட்டாரை எதிர்த்து கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டதே இந்த கொலைக்கு காரணம் என்று சந்தேகிக்கப்பட்டது. 

ttn

இதையடுத்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த நெல்லை டவுன் போலீசார் வான்மதியின் அண்ணன் செல்லச்சாமி, செல்லத்துரை , முருகன் மற்றும் முத்துப்பாண்டியன் உள்பட சிலரை நேற்று பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும்  உண்மைகள் வெளியாகியுள்ளன. 

ttn

இதுகுறித்து வான்மதியின் அண்ணன் செல்லசாமி போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், ‘நாங்களும் நம்பிராஜன் குரூப்பும்  தனிதனியாக சுற்றி வந்தோம். அப்போது நம்பிராஜன் என் தங்கையை காதலித்து வந்தது  தெரியவந்தது.   இதனால் அவனை அழைத்து எச்சரித்தோம். ஆனால்  நம்பிராஜனோ, டிக் டோக்கில்  என் தங்கையை தூக்கிட்டு போய் கல்யாணம் பண்ணுவேன்  என்று  சவால் விட்டார். நானும் அப்படி நீ செய்தால் உன் தலை உன்கிட்ட இருக்காது என்றேன்.  அவன் சொன்னபடி என் தங்கையை திருமணம் செய்துகொண்டான். அதிலிருந்து அவனை  தேடி  வந்தோம். அப்போது நம்பிராஜன் நெல்லையில் பதுங்கி இருந்து குடும்பம் நடத்தி வந்தது எங்களுக்கு தெரியவந்தது. இதனால் அவனை திட்டமிட்டு கொலை செய்து ரயில் தண்டவாளத்தில் வீசினோம். ரயில் விபத்து போல சித்தரித்து விடலாம் என்று நினைத்த எங்களைபோலீஸ் கைது செய்து விட்டது’ என்று கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.