‘உன்ன பார்த்தாலே பத்திகினு எரியுது’: மீரா மீது பொங்கி எழுந்த சாண்டி!

 

‘உன்ன பார்த்தாலே பத்திகினு எரியுது’: மீரா மீது பொங்கி எழுந்த சாண்டி!

பிக் பாஸ் சீசன் 3யின் இன்றைக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது. 

சென்னை:  பிக் பாஸ் சீசன் 3யின் இன்றைக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது. 

 பிக்பாஸ் 3 தொடங்கி நான்கு வாரம் கடந்துவிட்டது. வாரந்தோறும் ஒருவர் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் ஃபாத்திமா பாபு, வனிதா மற்றும் மோகன் வைத்யா ஆகியோர் வெளியேறியுள்ளனர். இந்த நிலையில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் லிஸ்டில் சரவணன், சேரன், அபிராமி, மீரா, கவின் மற்றும் சாக்ஷி ஆகியோர் நாமினேட் ஆகியுள்ளனர். 

இந்த நிலையில் இன்றைக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது. அதில் ஹவுஸ் மேட்ஸ்க்கு இந்த வாரத்திற்கான டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அது என்னவென்றால் ஹவுஸ் மேட்ஸ் இரு வேறு கிராமங்களாக பிரிக்கின்றனர். 

காப்புப்படி மற்றும் கீரிப்பட்டி என்று பிரிந்த இரு அணிகள் கிராமப்புறத்தில் அணியும் உடைகளை  அணிந்துள்ளனர். நாட்டாமையாகச் சேரன் இருக்க மைனர் போல் சரவணன் வேடமிட்டுள்ளார். மேலும் ஷெரின்க்கு, தர்ஷன் உணவு ஊட்டிவிடுகிறார். வழக்கம் போல் சாண்டி அங்கு இருக்கும் அனைவரையும் மகிழ்விக்கும் விதமாக மீராவை பார்த்து, ‘உன்ன பாத்தாலே பத்திகினு எரியுது’ என்று நகைச்சுவையாக கமெண்ட் செய்துள்ளார். ஆகமொத்தத்தில் இன்றைய எபிசொட் சற்று விறுவிறுப்பாகச் செல்லும் என்று எதிர்ப்பாக்கப்படுகிறது.