“உன்கிட்டலாம் பதில் சொல்ல முடியாது” மது அருந்திவிட்டு பெண் போலீசிடம் தகராறில் ஈடுபட்ட அதிமுக பிரமுகர்!

 

“உன்கிட்டலாம் பதில் சொல்ல முடியாது” மது அருந்திவிட்டு பெண் போலீசிடம் தகராறில் ஈடுபட்ட அதிமுக பிரமுகர்!

நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், மக்கள் தடையை மீறி வெளியே செல்கிறார்களா என்று போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், மக்கள் தடையை மீறி வெளியே செல்கிறார்களா என்று போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், அதிமுகவின் முன்னாள் மாவட்ட செயலாளரும் தற்போதைய விவசாய அணி செயலாளருமான கதிர் தண்டபாணி தடையை மீறி வெளியே வந்தது மட்டுமில்லாமல் பெண் போலீசிடம் தகராறு செய்த வீடியோ வைரல் ஆகி வருகிறது. 

ttn

நேற்று சேலம் நெடுஞ்சாலையில் காரில் சென்ற அவரை, சுங்கசாவடி அருகே பணியில் ஈடுபட்டிருந்த பெண் போலீஸ், அனுமதி சீட்டை காட்டுமாறு கேட்டுள்ளார். அப்போது அவர் பாஸ் இல்லை என்றும் காரை ஓரங்கட்ட முடியாது என்றும் கூறியுள்ளார். அவர் குடிபோதையில் இருப்பதை அறிந்த போலீஸ், மது எங்கிருந்து கிடைத்தது என்று கேட்டதற்கு, உன்கிட்ட பதில் சொல்ல முடியாது, வேறு யாரை வேண்டுமானாலும் வரச்சொல்லு என்று கூறிவிட்டு காரை எடுத்துக் கொண்டு அங்கிருந்து சென்றுள்ளார்.  144 தடை உத்தரவை மீறி வெளியே வந்தது, மட்டும் இல்லாமல் குடித்து விட்டு வாகனம் ஓட்டியதால் அவர் மீதுபோலீசார் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.