“உனக்கு ஆகனும்டா லூசுப்பயலே!” கொதித்த நெட்டிசன்கள்… எல்லை மீறிய இளைஞருக்கு கிடைத்த சரியான தண்டனை!
டிக்டாக் விபரீதங்கள் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகின்றன. இணையத்தில் பிரபலமாவதற்கு எதுவும் செய்யத் துணிந்த இன்றைய இளைய சமூகத்தினரை பார்க்கும் போது, நாட்டின் எதிர்காலம் கேள்விக்குறியாகிறது.
டிக்டாக் விபரீதங்கள் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகின்றன. இணையத்தில் பிரபலமாவதற்கு எதுவும் செய்யத் துணிந்த இன்றைய இளைய சமூகத்தினரை பார்க்கும் போது, நாட்டின் எதிர்காலம் கேள்விக்குறியாகிறது.
தங்களின் நடிப்பு திறனை வெளிக்கொணர கொண்டுவரப்பட்ட செயலி தற்போது பலரின் கள்ளக்காதலுக்கு கூடாரமாக மாறிவருகிறது. சமீபத்தில் ஓடும் ரயிலில் தொங்கிக்கொண்டு டிக்டாக் வீடியோ எடுத்த நபர் மின்கம்பியில் மோதி உயிரிழந்தது நாடு முழுதும் அதிர்வை ஏற்படுத்தியது. சாதிச்சண்டையின் போர்க்களமாக மாறிவிட்ட சமூக வலைத்தளங்கள் பல வன்முறைகளை தூண்டி வருகிறது.
சமூக வலைத்தளத்தில் வெளியான இந்த விடியோயோவில் இரு இளைஞர்கள் பைக்கில் போய்க்கொண்டிருக்கின்றனர். வழியில்ஒரு எருமை மாடு நின்று கொண்டிருக்க, அதை எட்டி உதைக்க முயன்ற நபர் தடுமாறி அருகில் இருந்த மின்கம்பத்தில் மோதி கீழே விழுந்தனர். இதைப் பகிர்ந்தவர் “உனக்கு இப்படி தான் நடக்க வேண்டும் கோமாளி” என்ற தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
பிறரை சந்தோஷப்படுத்த மற்றவர்களை துன்பறுத்தவும் துணிந்துவிட்டனர் இன்றைய இளைய சமூகத்தினர்!
Serves you right you f*cking clown ? pic.twitter.com/KxDfRs3yhv
— CCTV IDIOTS (@cctvidiots) February 12, 2020