உத்திரபிரதேசத்தில் ஊரடங்கு உத்தரவு ஏப்.30 வரை நீட்டிப்பு!
கொரோனா அச்சம் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். இதன் காரணமாக ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துள்ளது.
கொரோனா அச்சம் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். இதன் காரணமாக ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் உத்திரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் 144 தடை உத்தரவு ஏப்.30-ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. மார்ச் 19-ம் தேதி முதல் ஏப்ரல் 5 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில் மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு ஏப்.14 வரை அமலில் உள்ள நிலையில் மேலும் 16 நாட்கள் அதாவது ஏப்ரல் 30 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோயைத் தடுக்கும் பொருட்டு, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு மட்டுமே வீடுகளை விட்டு வெளியேற வேண்டும் என்றும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.