உத்தரப்பிரதேசத்தில் ஒரே நாளில் 172 பேருக்கு கொரோனா! மொத்த பாதிப்பு 285 ஆனது…

 

உத்தரப்பிரதேசத்தில் ஒரே நாளில் 172 பேருக்கு கொரோனா! மொத்த பாதிப்பு 285 ஆனது…

இந்தியாவில் கொரோனா வைரஸ்க்கு இதுவரை 72 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் தற்போது 2, 567 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன் 198 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். நாடு முழுக்க மக்கள் கொரோனா பீதியில் காணப்படுகின்றனர். இதனால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர்.

coronavirus

இந்நிலையில் உத்தர பிரதேசத்தில் ஏற்கனவே 113 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருந்தது. இந்நிலையில் தற்போது ஒரே நாளில் 172 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிதாக கொரோனா உறுதியான 172 பேரில் 42 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்களாவர். இதன்மூலம் உத்திரபிரதேசத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 285 ஆக அதிகரித்தது. இதேபோல் கர்நாடகாவில் 125 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.