உத்தரபிரதேசத்தில் சாக்லெட் கொடுத்து 4 வயது சிறுமி பலாத்காரம் – நெருங்கிய உறவினரான வாலிபர் கைது

 

உத்தரபிரதேசத்தில் சாக்லெட் கொடுத்து 4 வயது சிறுமி பலாத்காரம்  – நெருங்கிய உறவினரான வாலிபர் கைது

உத்தரபிரதேசத்தில் சாக்லெட் கொடுத்து ஏமாற்றி 4 வயது சிறுமியை கற்பழித்த நெருங்கிய உறவினரான வாலிபர் கைது செய்யப்பட்டான்.

லக்னோ: உத்தரபிரதேசத்தில் சாக்லெட் கொடுத்து ஏமாற்றி 4 வயது சிறுமியை பலாத்காரம் செய்த நெருங்கிய உறவினரான வாலிபர் கைது செய்யப்பட்டான்.

உத்தரபிரதேசத்தின் பண்டா மாவட்டத்தில் நான்கு வயது சிறுமி தனது நெருங்கிய உறவினரான வாலிபரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு சாக்லெட் கொடுத்து அவளை தனியான இடத்திற்கு அழைத்து சென்று, அந்த சிறுமியின் நெருங்கிய உறவினரான ரவி சோனி (வயது 24) என்ற வாலிபன் சிறுமியை பாலியல் பலாத்காரம் புரிந்துள்ளான்.

ttn

இதையடுத்து அவனிடமிருந்து தப்பித்த அந்த சிறுமி வீட்டுக்கு ஓடிப்போய் தனது அம்மாவிடம் நடந்த விஷயத்தை கூறியிருக்கிறாள். உடனே சிறுமியின் குடும்பத்தினர் இந்த விவகாரம் தொடர்பாக போலீசாரிடம் புகாரளித்தனர். இதைத் தொடர்ந்து குற்றம் புரிந்த வாலிபனை போலீசார் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட சிறுமி ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள். மேலும் அவளது உடல்நிலை சீராக இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.