உதவியாளர் கன்னத்தில் ‘பொளீர்’ என்று அறைந்த முன்னாள் முதல்வர்: வைரலாகும் வீடியோ!
மைசூர் விமானநிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துவிட்டுச் செல்லும் போது, அவரது உதவியாளரைக் கன்னத்தில் பொளீர் என்று அறைந்தார்.
கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் சித்தராமையா அவரது உதவியாளரை அடித்த காட்சி சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
கர்நாடகாவில் குமாரசாமி தலைமையில் நடந்து வந்த காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி ஆட்சி, கவிழ்ந்ததையடுத்து பாஜகவின் எடியூரப்பா ஆட்சியைக் கைப்பற்றினார். கர்நாடகாவிலிருந்த கூட்டணி ஆட்சி கவிழ்ந்ததில் இருதரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது. இரு கட்சிகளும் மாறி மாறி குறைசொல்ல ஆரம்பித்து அங்கு பரபரப்பைக் கிளப்பினர்.
#WATCH: Congress leader and Karnataka’s former Chief Minister Siddaramaiah slaps his aide outside Mysuru Airport. pic.twitter.com/hhC0t5vm8Q
— ANI (@ANI) September 4, 2019
இந்நிலையில் முன்னாள் முதல்வர் சித்தராமையா மைசூர் விமானநிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துவிட்டுச் செல்லும் போது, அவரது உதவியாளரைக் கன்னத்தில் பொளீர் என்று அறைந்தார். உதவியாளர் ஏதோ கூறியதற்குக் கோபப்பட்ட சித்தராமையா அவரை அறைந்ததாகத் தெரிகிறது. இந்த சம்பவத்திற்குப் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.