உண்மையான ஹீரோ யார்? ட்விட்டரில் விவேக்

 

உண்மையான ஹீரோ யார்? ட்விட்டரில் விவேக்

கோடைக்குப் பிறகும் பெரிய அளவில் இன்னும் மழை தமிழகத்தின் மீது கருணை காட்டாததால், தண்ணீர் தட்டுப்பாட்டின் காரணமாக வறண்ட மாவட்டங்களாக பெரும்பாலான தமிழக மாவட்ட மக்கள் கடும் துன்பத்திற்கு ஆளாகியுள்ளார்கள்.

கோடைக்குப் பிறகும் பெரிய அளவில் இன்னும் மழை தமிழகத்தின் மீது கருணை காட்டாததால், தண்ணீர் தட்டுப்பாட்டின் காரணமாக வறண்ட மாவட்டங்களாக பெரும்பாலான தமிழக மாவட்ட மக்கள் கடும் துன்பத்திற்கு ஆளாகியுள்ளார்கள்.

vivek

முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் கோரிக்கையை ஏற்று பல ஆண்டுகளாகவே தமிழகம் முழுவதும் மரங்களை நடும் பணியில் ஈடுபட்டிருக்கும் நடிகர் திரு.விவேக் சமீபத்தில், நடிகர் சங்கத் தேர்தலில் தனது வாக்கைப் பதிவு செய்த பிறகும் கூட, மழை நீர் சேகரிப்பு பற்றியும், ஏரி, குளங்களைத் தூர் வாறும் மாணவர்கள், பொதுமக்களைப் பற்றியும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு ஊடகங்களிடம் கோரிக்கை வைத்திருந்தார்.

twitter image

இந்நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில், கடும் வெய்யிலைத் தாங்காமல், இரு சக்கர வாகனத்தின் நிழலில் இளைப்பாறும் நாய் ஒன்றின் புகைப்படத்தை பகிர்ந்து, ‘ஒரு நாய்க்கு நிழல் கொடுத்த இந்த ஹோண்டா உண்மையில் ஒரு ஹீரோ தான். அந்த நாய் ஒதுங்க கூட மரம் நடாத நாம் தான் உண்மையில் வில்லன்கள்’ என்று பதிவு செய்திருக்கிறார்.

‘லெட்ஸ் ப்ளாண்ட் ட்ரீஸ்’ க்குட்டி மரங்கள் என்று பல ஆண்டுகளாக குரல் கொடுத்து வரும் நடிகர் விவேக்கிற்கு பொதுமக்கள் ஆதரவையும், பாராட்டுக்களையும் தெரிவித்திருக்கிறார்கள்.