உணவை மருந்தாக்கு… கொரோனாவை எழுந்து எதிர்கொள்! – வைரமுத்து கவிதை

 

உணவை மருந்தாக்கு… கொரோனாவை எழுந்து எதிர்கொள்! – வைரமுத்து கவிதை

உணவை மருந்தாக்கு, உடம்பை இரும்பாக்கு, கொரோனா வைரசை எழுந்து எதிர்கொள் என்று வைரமுத்து கவிதை வெளியிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் இருவருக்கு ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால், மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா வைரசை எதிர்கொள்வது பற்றி கவிஞர் வைரமுத்து கவிதை ஒன்றை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

உணவை மருந்தாக்கு, உடம்பை இரும்பாக்கு, கொரோனா வைரசை எழுந்து எதிர்கொள் என்று வைரமுத்து கவிதை வெளியிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் இருவருக்கு ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால், மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா வைரசை எதிர்கொள்வது பற்றி கவிஞர் வைரமுத்து கவிதை ஒன்றை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

vairamuthu-90

அந்த கவிதை,
“உணவை மருந்தாக்கு
உடம்பை இரும்பாக்கு

மூச்சுப் பைகளில்
நம்பிக்கை நிரப்பு
நோய்த் தடுப்பாற்றல்
பெருக்குதல் சிறப்பு

கோவிட் – 19
கொல்லுயிரியை
எழுந்து எதிர்கொள்
இந்திய நாடே!”