உணவை சுவைத்து பார்க்க தினமும் ரூ. 9,000 சம்பளம்…தங்குமிடம் இலவசம்…ஆட்கள் தேவை!
தேனீர், காபி, ஸ்நாக்ஸ், ஐஸ்க்ரீம் , மற்ற ஜூஸ் வகைகளை சாப்பிட்டு எப்படி இருக்கிறது
கரும்பு தின்ன கூலியா என்ற பழமொழி ஒன்று வழக்கத்தில் வழக்கத்தில் உள்ளது. அதேபோல் தினமும் சாப்பிடுவதற்கு தங்க இடம் கொடுத்து சம்பளம் கொடுத்தால் கசக்கவா செய்யும். அப்படிப்பட்ட ஒருவேலைக்கு தான் ஆட்கள் வேண்டுமாம்.
இங்கிலாந்து நாட்டில் கிராஸ்மியர் மாகாணத்தில் டாபோடில் எனும் இடத்தில் ஹோட்டல் ஒன்று இயங்கி வருகிறது. இங்கு வேலைக்கு ஆட்கள் தேவையாம். ஆனால் என்ன வேலை என்று கேட்டால் சத்தியமா ஷாக் ஆகிடுவீங்க. ஏன்னா ஹோட்டலில் விற்கப்படும் உணவுகளை சுவை பார்க்க வேண்டுமாம் இதுதான் வேலை.
தேனீர், காபி, ஸ்நாக்ஸ், ஐஸ்க்ரீம் , மற்ற ஜூஸ் வகைகளை சாப்பிட்டு எப்படி இருக்கிறது என கூற ஒரு நாளைக்கு அதாவது தினமும் 129 டாலர் சம்பளமாக வழங்கப்படும் என அந்த ஹோட்டல் நிர்வாகம் அறிவித்துள்ளது. இது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ. 9 ஆயிரம் ஆகும்.
இந்த வேலைக்கு வருபவர்களுக்குத் தங்குமிடம் இலவசம் என்றும் வரும் 25ஆம் தேதி முதல் ஆட்கள் இந்த வேலைக்கு அமர்த்தப்படவுள்ளார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹோட்டலை பிரபலப்படுத்தும் நோக்கத்தோடு இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஹோட்டல் தரப்பில் கூறப்பட்டுள்ளது.