உணவு கொடுக்க சென்ற பெண்ணை உயிருடன் விழுங்கிய முதலை: அதிர்ச்சி தரும் சம்பவம்!
பெண் ஆராய்ச்சியாளர் ஒருவரை முதலை ஒன்று உயிருடன் விழுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தோனேசியா: பெண் ஆராய்ச்சியாளர் ஒருவரை முதலை ஒன்று உயிருடன் விழுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தோனேசியாவின் சுலவேசி பகுதியில் 17 அடி முதலை ஒன்று அறிவியல் ஆராய்ச்சி நிலையத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து இந்த முதலைக்கு பெண் ஆராய்ச்சியாரான டேசி டூவோ உணவு கொடுக்க முயன்றுளார். அப்போது திடீரென 8 அடி தூரம் தாவிக் குதித்த அந்த முதலை டேசியை அப்படியே தரதரவென அதன் இடத்திற்கு வாயால் இழுத்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த டேசி அலறித்துடித்துள்ளார். பின்னர் முதலையானது டேசியை உயிருடன் அப்படியே விழுங்கியதாக கூறப்படுகிறது.
Here's the victim, a 44-year-old woman identified as Deasy Tuwo, worked at a pearl farm owned by a Japanese national, who authorities say kept several exotic animals in the farm, including a 600 kg, 5-meter long crocodile named Merry. pic.twitter.com/juVxRqkwqp
— کاویری (@ikaveri) January 14, 2019
டேசி, முதலையின் வாயில் பாதி உள்ளே சென்ற நிலையில் அதனை டேசியின் தோழி கண்டிருக்கிறார். இருப்பினும் முதலையின் வாயில் இருந்து டேசியை மீட்க முடியவில்லை. ஆராய்ச்சியாளரை விழுங்கிய முதலைக்கு விரைவில் சோதனை செய்யப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. முதலை ஒன்று பெண் ஒருவரை விழுங்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.