உணவுப் பொருட்களை கொட்டிக் கவிழ்க்க யார் அதிகாரம் தந்தது? : எம்பி கனிமொழி ஆவேசம்!

 

உணவுப் பொருட்களை கொட்டிக் கவிழ்க்க யார் அதிகாரம் தந்தது? : எம்பி கனிமொழி ஆவேசம்!

 இதனால் காய்கறி மற்றும் பழ வியாபாரம் செய்யும் சிறு வியாபாரிகள் கடைகளை திறந்து வைத்துள்ளனர்.  

தமிழகத்தை பொறுத்தவரையில்  மக்களின் அத்தியாவசிய தேவைகளை கருத்தில் கொண்டு ஊரடங்கில் சில தளர்வுகள் கொண்டு வரப்பட்டுள்ளது.  இதனால் காய்கறி மற்றும் பழ வியாபாரம் செய்யும் சிறு வியாபாரிகள் கடைகளை திறந்து வைத்துள்ளனர்.  

rrr

அந்த வகையில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சியில் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்பனையில் சாலையோர வியாபாரிகள் ஈடுபட்டிருந்தனர்.  அப்போது அங்கு வந்த நகராட்சி ஆணையர் சிசில் தாமஸ், வியாபாரிகள் விற்பனைக்காக வைத்திருந்த பொருட்களை எட்டி உதைத்தும் சாலையில் தூக்கி வீசியும் அராஜக செயலில் ஈடுப்பட்டார். இதற்கான வீடியோ இணையத்தில் வெளியாகி கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்நிலையில்  திமுக எம்பி கனிமொழி தனது டிவிட்டர் பக்கத்தில், “வாணியம்பாடி ஆணையரின் இந்த மனிதத்தன்மையற்ற  செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஏழை வியாபாரிகள் என்றால் அவ்வளவு இளக்காரமா ? எளியவர்களிடம் மட்டுமே இவர் போன்றவர்களின் அதிகாரக் கரங்கள் அத்துமீறும். எச்சரிக்கை செய்வதை விடுத்து, இப்படி உணவுப் பொருட்களை கொட்டிக் கவிழ்க்க யார் அதிகாரம் தந்தது ? இவர்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்று கடுமையாக சாடியுள்ளார்.